சென்னை மாநிலக் கல்லூரி வரலாற்றுத்துறை மற்றும் வரலாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் “சிந்து முதல் பொருநை வரை” என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ராமன், தொல்லியல் ஆய்வாளர் முனைவர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா, தொல்பொருள் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர் ஏ.கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.