districts

img

வீடுகளை விட்டு காடுகளில் தஞ்சமடைந்த இருளர் மக்கள்

திருவள்ளூர், அக்.5- தமிழக அரசின் 2024 - 25 ஆம்  ஆண்டிற்கான பட்ஜெட்டில் மானிய கோரிக்கை எண் 42-ல்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் திட்டத்தில் புதியதாக 15 அறிவிப்புகள் வெளி யிடப்பட்டது. 7ஆயிரம் சுய உதவி குழுக்க ளுக்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப் படும். 40ஆயிரம்  கிராமப்புற இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி ரூ.90 கோடி செலவில் வழங்கப்படும். 4000 பேருக்கு தனியார் நிறுவனங்களில்,  இணை மானிய நிதி  திட்டத்தின் மூலம் முறையாக நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ.150 கோடி கடன் உதவி வழங்கப்படும். பத்தாயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடி சூழல் நிதி வழங்கப்படும். 7500கும் மேற்பட்ட தொழில் முனை வோர்களுக்கு 5 கோடியே 62 லட்சம்  ரூபாய் செலவில்,  தொழில் முனை வோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப் படும். மாநில முழுவதும் 50 இடங்களில் மாவட்ட அளவிலான வேலை  வாய்ப்பு முகாம்கள், 50 இளைஞர் திறன் திருவிழாக்கள், ரூ.75 லட்சம் செலவில் நடத்தப்படும் என அதில் அறிவிக்கப்பட்டிருந்தது.

வறுமை ஒழிப்பு திட்டங்கள் காணவில்லை

இப்படி தமிழ்நாடு அரசு வறுமையை ஒழிக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ள போதிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள 263 பழங்குடி மகளிர் சுய உதவி குழுக்ளுக்கு போதிய வங்கிக் கடன் வசதி செய்து தரப்படவில்லை. இதுவரை 24 குழுக்களுக்கு மட்டுமே ரூ.2 கோடி  47 லட்சம் வங்கிக் கடன் பெற்றுத் தரப்பட்டுள்ளளது. மீதமுள்ள 239 பழங்குடி மகளிர் சுய உதவி  குழுக்களை திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க  திட்ட இயக்குநர் கண்டு கொள்ளவில்லை பழங்குடி மக்கள் வாழும் பல ஊராட்சிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் இன்னும் அமைக்கவில்லை. அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்படாமல் இருக்கி றது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு  கந்து வட்டியில் சிக்கிய ஊத்துக் கோட்டை வட்டம் திருக்கண்டலம், திருத்தணி வட்டம் டி.புதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த இரண்டு பழங்குடியினர் தற்கொலை செய்து கொண்டனர். திருவலாங்காடு ஒன்றியம், தாழவேட்டில் 15 குடும்பங்கள் நுண்  நிதி வங்கியில் கடன் பெற்று அதை  திருப்பி கட்ட முடியாமல் வீட்டை பூட்டிவிட்டு  காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறுகின்றனர்.  கடம்பத்தூர் ஒன்றியம், கன்னியம்மா நகரில் நுண் நிதி நிறுவனங்களுக்கு பயந்து, தொகுப்பு வீடுகளை அப்படியே விட்டு, விட்டு மீண்டும் ஏரிக்கரைகளில் வாழத் தொடங்கி விட்டனர். பூண்டி ஒன்றியம் வாழ வந்தான் கோட்டையில் அரசு கொடுத்த  வீட்டுமனை பட்டாவை, கடன் கொடுத் தவர்களிடம் கொடுத்துவிட்டு வெளி யூர் சென்று விட்டனர். ஆர்.கே.பேட்டை  ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரத்தில் இரண்டு குடும்பங்கள் ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழு வதும் பழங்குடி மக்கள் எந்த வரு வாயும் இன்றி வறுமையில் வசிக் கின்றனர். இந்த பகுதிகளில் பத்துக்கும்  மேற்பட்ட தனியார் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று, மக்கள்  கட்ட முடியாத சூழலில் தற்கொலை செய்து கொள்வதும்,  ஊரை விட்டு காலி செய்து காடுகளில் வாழும் அவலம் தொடர்கிறது.

அதிகாலையில் நச்சரிப்பு

நுண் நிதி நிறுவன ஊழியர்கள் கடனாளிகளை தொடர்ந்து நச்சரித்து  வருகின்றனர் காலை 9 மணிக்கு  முன் மற்றும் மாலை 6 மணிக்கு   பிறகு அவர்களை தொலைபேசியில் அழைப்பதும் நேரடியாக சென்று கடன் வசூலிப்பதும் கூடாது என்று  இந்திய ரிசர்வ் வங்கியின் வழி காட்டுதல் உள்ளது. அரசின் எந்த  வழிகாட்டு நெறிமுறைகளையும் நுண் நிதி நிறுவனங்கள் கடைபிடிப்ப தில்லை. பழங்குடி மக்களிடம் இரவு நேரத்திலும் அதிகாலையிலும் கடன் வசூல் தொடர்கிறது. இதனை மாவட்ட  நிர்வாகம் கண்டிக்கவில்லை. ரிசர்வ் வங்கி நுண் நிதி  கடன்க ளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு,  மாவட்ட ஆட்சியர்களுக்கு சில வழி காட்டு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இதுகுறித்து சுய உதவி குழு  உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மகளிர் குழுக்களுக்கும் விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும். பழங்குடியினருக்கு வங்கி மூலம் கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பழங்குடி மக்களை கந்து வட்டி யில் இருந்து மீட்டிட பழங்குடி மகளிர் சுய உதவி குழுக்களை துவங்கி 6 மாதம் முடிந்தவுடன் அனைத்து குழுக்களுக்கும் வங்கியின் மூலம் கடன் வழங்குவதை தமிழ்நாடு ஊரக  வாழ்வாதார திட்ட இயக்குநர்,   உறுதி  செய்திட வேண்டும்.

வேலைவாய்ப்பை உறுதி செய்க

ஊராட்சி அடையாள கூட்டமைப் பின் மூலம்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட நிதியிலிருந்து சமுதாய முதலீட்டு நிதிக் கடன் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். தனி நபருக்கு தொழில் துவங்க வங்கிகள் மூலம் முத்ரா கடன் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளைஞர் வேலை வாய்ப்பு முகாமில் பழங்குடி இளைஞர்களை வேலைவாய்ப்பு முகாமிற்கு அழைத்துச் சென்று பொருத்தமான துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு   கேட்டுக்கொண்டுள்ளார். அடையாள அட்டை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து பழங்குடி மக்களுக்கும் வேலைக்கான அட்டை வழங்கி வேலை கொடுப்பதை உறுதி செய்திட  வேண்டும். தமிழ்நாடு ஊரக வாழ் வாதார இயக்கம்,  ஊரக வளர்ச்சி முகமை இவைகளை ஒருங்கிணைத்து அந்த மக்களுக்கான வறுமை ஒழிப்பு  திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.  இதை செய்தால் மட்டுமே பழங்குடி மக்களை கந்து  வட்டி கொடுமையில்  இருந்தும் காப்பாற்ற முடியும்.  அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனியார் நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நுண் நிதி கடன் தொல்லை யால் தலைமறைவாக உள்ள இருளர்  இன மக்களை மீட்டு தங்களின் வீடுகளில் குடியமர்த்த வேண்டும். சில குடும்பங்கள் வீடுகள் மற்றும் பட்டாக்களை கடனுக்கு பதிலாக கொடுத்து விட்டு  சென்றுள்ளனர். இதை மீட்டு உரிய வரிடம் வழங்க வேண்டும். வெளி ஆட்கள் மிரட்டுவதிலிந்து இருளர் இன மக்களுக்கு பாதுகாப்பு வழங்க  வேண்டும்  இதனை மாவட்ட நிர்வா கம்  கால தாமதம் செய்யாமல் விரைந்து செய்ய வேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தினார். - பெ.ரூபன்