districts

img

புதிதாக நீர்தேக்க தொட்டி கட்டித்தருக

விழுப்புரம், பிப்.28- திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திரு வெண்ணெய்  நல்லூர் வட்டம், காந்தலவாடி கிராமத் தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை சரி செய்ய வேண்டும், தெரு ஆக்கிர மிப்பை  அகற்றி சிமெண்ட் சாலை அமைத்து கொடுக்க வேண்டும், கிராமத்தில்  புது குடிநீர் மோட்டார் மற்றும் நீர் தேக்க தொட்டி கட்டி கொடுக்க வேண்டும், சுடுகாட்டில் ஆக்கிர மிப்பை அகற்றி மதில் சுவர் அமைத்து கொடுக்க வேண்டும், புதுமனையில் உள்ள தெருக்க ளில் புதியதாக மின் கம்பங்கள் அமைத்து கொடுக்க வேண்டும், கிராமத்திலிருந்து பேருந்து வசதி இல்லாததால் 5 கிலோ மீட்டர் நடந்து செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும், சமுதாயக் கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். இந்த போராட்டத்தில் டி.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கீதா, வட்ட செயலாளர் கே.சிவக்குமார், நிர்வாகிகள் வி.மணிகண்டன்,ஏ.செந்தில், எஸ்.சாமிநாதன்,எஸ்.பிரபாகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.