புதுச்சேரி,டிச.25- பாவேந்தர் பாரதி தாசனின் பேரன் கோ. செல்வம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. பாவேந்தர் பாரதி தாசனின் பேரன், மன்னர் மன்னன் சாவித்திரி அம்மை யார் மூத்த மகனான கோ.செல்வம் திங்களன்று (டிச.25) அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் இரா. ராஜாங்கம்,“ அகில இந்திய வானொலியில் புதுச்சேரி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், சிந்தனை யாளர் பேரவை என்ற அமைப்பை நிறுவி மக்கள் உரிமைச் சார்ந்த பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். பொதுநல அமைப்புகள் சார்பில் கூட்டாக நடக்கும் போராட்டங்களில் தவறா மல் கலந்து கொண்டு ஆத ரவு தந்தவர். அவரது இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கி றோம்” என்று கூறியுள்ளார்.