districts

img

தீவிபத்தில் வீட்டை இழந்த மூதாட்டிக்கு அரசு உதவி வழங்க சிபிஎம் வேண்டுகோள்

 ராணிப்பேட்டை,பிப். 24– தீ விபத்து ஏற்பட்டு வீட்டை இழந்த பழங்குடி இருளர் இனத்தை மூதாட்டிக்கு நிவாரணம் வழங்கி தங்குவதற்கு  ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி  வேண்டு கோள் விடுத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட் டம், கலவை பேரூராட்சிக் கட்பட்ட இருளர் காலனி பகுதியில் ஓலை கீற்றில் வீடுகட்டி மின்சாரம் இன்றி அகல் விளக்கு ஒளியில் சாவித்திரி (வயது.64) என்ற மூதாட்டி வசித்து வந்தார்.இந்நிலையில் வியா ழனன்று (பிப். 22) இரவு எதிர்பாராத விதமாக அகல் விளக்கிலிருந்து தீ ஓலை கீற்றில் பரவி விபத்து ஏற்பட்டுள்ளது.   இது குறித்து தகவல் அறிந்து வந்த கலவை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவத்தை அறிந்து வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் ஆகியோர் நேரில்  வந்து விதவை மூதாட்டிக்கு தேவையான நிவாரண உதவிகளை ஏற்பாடு செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு  மார்க்சிஸ் கட்சியின் கலவை தாலுகா குழு சார்பில் ஆறுதல் தெரி விக்கப்பட்டது. இதில் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரகுபதி, கலவை தாலுகா செய லாளர் எஸ். கிட்டு, வட்டாரக் குழு உறுப்பினர் ஆதி மூலம் ஆகியோர் கலந்து  கொண்டனர். கலவை தாலுகா செய லாளர் எஸ். கிட்டு  பாதிக்கப் பட்ட மூதாட்டிக்கு நிவார ணத்துடன், தங்குவதற்கு  ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள்விடுத்  துள்ளார்.