districts

சிபிஎம் அகில இந்திய மாநாடு திருவண்ணாமலையில் வரவேற்பு அமைப்பு

திருவண்ணாமலை, பிப்.5- திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் போளூர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் ப.செல்வன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் எம். பிரகலாதன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்  என்.பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மூத்த நிர்வாகி  எம்.வீரபத்திரன், மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவேற்பு குழு தலைவராக எம். வீரபத்திரன், செயலாளர் ப. செல்வன், பொருளாளராக கே. காங்கேயன், துணைத் தலைவர்களாக இரா. பாரி, அ.உதயகுமார், சி.எம். பிரகாஷ், மாரிமுத்து, துணைச்செயலாளர்களாக ஏ. லட்சுமணன், கே.கே.வெங்கடேசன், எஸ்.ராமதாஸ், அப்துல் காதர் உள்ளிட்ட 139 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.