districts

img

சிபிஎம் கையெழுத்து இயக்க எதிரொலி சிதம்பரத்தில் கழிப்பறை திறப்பு

சிதம்பரம், அக்.25- சிதம்பரம் நகராட்சி பகுதியில் குஞ்சர மூர்த்தி விநாயகர் கோவில் தெருவில் பொதுக்கழிவறை உள்ளது. இந்தக் கழி வறையை அப்பகுதியில் உள்ள பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த ஒரு வார காலமாக கழிவறையில் இருந்து மோட்டார் பழுதாகி  கழிவறைக்கு தேவை யான தண்ணீர் இல்லாததால் கழிவறை பூட்டி இருந்தது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சிபி எம் 26-ஆவது வார்டு கிளைச் செயலாளர் பிரகாஷ் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணை யர் மற்றும் பொறியாளரிடம் புகார் அளித்துள்ளனர்.  நடவடிக்கை எடுக்காததால் வார்டு செயலாளர் பிரகாஷ் தலைமையில் கட்சி யின் நகர் குழு உறுப்பினர்கள் சங்க மேஸ்வரன், ராஜா, ராஜேஷ்குமார், ஆனந்த், சுபாஷ், நாகலிங்கம் உள்ளிட்ட வர்கள் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி னார்கள். இதனை அறிந்த நகராட்சி தலைவர் கே.ஆர். செந்தில்குமார் உத்தரவின்பேரில், நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பிறகு, உடனடியாக மோட்டார் பழுதை நீக்கி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுத்துக் கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.