districts

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கட்டுப்பாட்டு அறை

சென்னை,ஜூலை 14- ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கு தகுதியான நபர்களை கண்டறிய விரிவான ஏற்பாடுகளை செய்யும்படி சிறப்பு அதி காரி இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். இல்லம் தேடி கல்வியில்  பணியாற்றிய தன்னார்வலர் களை இந்த திட்டத்தில் முழு மையாக பயன்படுத்திக் கொள்ளவும் ஆட்சியர்க ளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இணைந்து மகளிர் உரி மைத் தொகை திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதற்காக சென்னையில் 3550-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. 24-ந் தேதி முதல்  இது செயல்படும். இந்த முகாம்களை கண்காணிக் கவும் ஊழியர்களை ஒருங்கி ணைக்கவும் மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு முகாம்கள் செயல் படும் போது அது தொடர் பான விவரங்களை பெறுவதற்கும் அவ்வப் போது அறிவுரைகள் வழங் குவதற்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு  கொள்ள வசதி ஏற்படுத்தப் படுகிறது. இது சம்பந்தமாக மாநகராட்சியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.