திருவள்ளூர், செப்.6- இருளர் இன மக்களின் தொகுப்பு வீடுகளை கட்ட ஒப்பந்ததாரர்களை அனு மதிக்க கூடாது என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகில் உள்ள கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காவாங்குளத்தூரில் பழங்குடியி னர் 65 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் 24 குடும்பங்களுக்கு அருகில் உள்ள சத்திரை கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவற்றில் 13 குடும்ப ங்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்ட, பணி ஆணையை பயனாளிகளுக்கு வழங்கப்படா மலேயே, அந்த 13 நபர்களுக்கு வீடு கட்டு வதற்காக ஒப்பந்ததார்கள் சட்ட விரோத மாக வீடு கட்டும் பணியை துவங்கியுள்ளனர்.இதற்கு இருவர் இன மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருளர் இன மக்களோ எங்கள் வீடுகளை கட்டிக் கொள்கிறோம் என்று கூறியபோது, அதெல்லாம் முடியாது நாங்கள் தான் உங்க ளுக்கு வீடு கட்டி தருவோம் வேறு யாரையும் வீடு கட்ட அனுமதிக்க முடியாது என்று ஒப்பந்ததாரர்கள் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இருளர் இன மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணையை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இன்னும் வழங்காமலேயே உள்ளார். தொகுப்பு வீடுகளுக்கான பெயர் பட்டியல், பயனாளிகளுடைய விவரம் எப்படி ஒப்பந்ததாரர்களுக்கு போனது என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலு வலரை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் ஆர்.தமிழ் அரசு திங்களன்று (செப்.2) நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து பேசுகை யில், தொகுப்பு வீடுகளை தரமாக கட்ட வேண்டும் என்றால், ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் கட்டு வதற்கான பணி ஆணைகளை அந்தந்த பயனாளர்களிடம் பிடிஒ வழங்க வேண்டும். முறைகேடுகள் இன்றி வீடுகளை தரமாக கட்டுவதற்கு பயனாளிகளே வீடுகளை கட்டு வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அரசின் விதி முறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளார்.