districts

img

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் முடியும்: துரைமுருகன்

வேலூர், மார்ச் 4- திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விரைவில் முடிவடையும் என்று திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கூறினார். காட்பாடியில் வேலூர் தாலுக்கா மற்றும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ஒன்றிய அரசு திட்டங்களை  தமிழக அரசு தடுப்பதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மதுரை எய்ம்ஸ்  பாஜக அரசு கொண்டு வந்த திட்டம்தான், ஆனால்  ஒன்றிய அரசு அதனை செயல்படுத்தவில்லை. வளர்ச்சி திட்டங்களை திமுக தடுத்திருக்கிறது என்பதற்கு ஒரு திட்டத்தையோ ஆதாரத்தையோ சொல்லுங்கள் பார்ப்போம் என்றார்.   போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவது அப்பட்டமான அரசியல் நாடகம் என கூறிய துரைமுருகன், திமுக கூட்டணியில்  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும்  என்றும்  அவர் தெரிவித்தார்.