districts

img

தோழர் ராஜேஷ் கண்ணன் தாயார் காலமானார்

கடலூர்,டிச.15- மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணனின் தாயார் ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கடலூர் பாதிரிக்குப்பம் காமன் கோவில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், வி.உதயகுமார், ஜி.ஆர்,ரவிச்சந்திரன், வி.சுப்புராயன், பி.கருப்பையன், வி.உதயகுமார், எஸ்.திருஅரசு, என்.எஸ். அசோகன், ஆர்.ராமச்சந்திரன், பி.தேன்மொழி. திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கடலூர் இள.புகழேந்தி, மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், பொதுநல இயக்கங்களில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கே.பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ் ஆகியோர் தொலைபேசி மூலம் இரங்கலை தெரிவித்தனர். ஓய்வு பெற்ற மின்னரங்க சிஐடியு தொழிற்சங்கத்தில் பணியாற்றிய ஜெயராமன் மனைவியாவார். ராஜேஸ்வரி இவர்களுக்கு ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர்.