காஞ்சிபுரம், மார்ச் 16- புதிய பசுமை விமான நிலைய திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, பொடாவூர் கிராம மக்கள் தங்களுக்கு உரிய நில இழப்பீடு அறி விக்கப்பட்டால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை களுக்கு ஒப்புதல் அளிப்ப தாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய 4800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. நில கைய கப்படுத்துவதை எளி தாக்க, மூன்று மண்டல அலுவலகங்கள் மற்றும் ஒரு தனி மாவட்ட வருவாய் அலுவலர் நிய மிக்கப்பட் டுள்ளனர். முதலில், பொடாவூர் மற்றும் சிறுவள்ளூர் கிரா மங்களில் உள்ள நில உரிமையாளர்கள், நில அளவு, பட்டா எண் போன்ற விவரங்கள் செய்தித் தாள்களில் அறிவிக்கப் பட்டன. பொடாவூர் கிரா மத்தில் 93 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆட்சேபனைகள் இருந்தால், தனி மாவட்ட வருவாய் நில எடுப்பு அலுவலரிடம் தெரிவிக்க லாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொடா வூர் கிராம மக்கள் தனி மாவட்ட வருவாய் அலு வலர் நாராயணனிடம் கோரிக்கை மனு அளித்த னர். மனுவில், தலைமுறை தலை முறையாக விவசா யம் செய்து வரும் நிலம், குடும்ப வாழ்வாதாரத்திற்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளனர். நில இழப்பீடு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே, நிலத்தை விட்டுக் கொடுப்பது பற்றிய முடிவை எடுக்க முடியும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், அரசு நில வழி காட்டு மதிப்பீடு குறைவாக இருப்பதால், இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், நில கையகப்படுத் தப்படும் இடுகாட்டிற்கு பதி லாக மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொடாவூர் கிராம மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உறுதியளித்தார்.