districts

img

சென்னையில் பிறந்த சந்திரிகா டாண்டனுக்கு இசைத்துறையின் உயரிய கிராமி விருது

சென்னை, பிப்,3-  இசைத்துறையில் சிறந்து விளங்கு வோருக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த 1951ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் கிராமி விருதுகள் இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. கிராமி விருதுகள் பாப், ராக், நாட்டுப் புறம், ஜாஸ் உள்ளிட்ட பல்வேறு ஜானர் இசைப்பிரிவில் வழங்கப்படு கிறது. இந்த ஆண்டு 67வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்தியா வம்சாவளியை சேர்ந்த பாடகி சந்திரிகா டாண்டன், இந்த பாடலுக்காக சிறந்த தற்கால இசை ஆல்பத்திற்கான பிரி வில் கிராமி விருது வென்றுள்ளார். ’த்ருவேனி’ என்ற இசை ஆல்பத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இசை க்கலைஞர் வௌட்டர் கெலர்மேன் மற்றும் ஜப்பானிய இசைக்கலைஞர் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து பாடி, கிராமி விருதை வென்றுள்ளார்.  சென்னையில் பிறந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். இவர் பெப்சிகோ  நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் மூத்த சகோதரி ஆவார். பட்டப்படிப்பிற்கு பின் அமெரிக்கா விற்கு புலம்பெயர்ந்த டாண்டன் தொழி ல்துறையில் சிறந்து விளங்கினார். இதனிடையே கடந்த 2005ஆம் ஆண்டில்  Soul chants music என்ற இசை லேபிள் நிறுவனத்தை தொடங்கினார். இதன்மூலம் அமெரிக்காவின் kennedy center, lincoln center, times square ஆகிய இடங்களில் பாடல்கள் பாடி வரவேற்பைப் பெற்றுள்ளார். நியூயார்க், ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ள சந்திரிகா டாண்டன் அமெரிக்கா கலை மற்றும் அறிவியல் அகாடமியில் உறுப்பினராக உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி த்ருவேனி ஆல்பத்தை சந்திரிகா வெளி யிட்ட நிலையில், தற்போது கிராமி விருது வென்று சாதித்துள்ளார். இந்த வருடம் சிறந்த நாட்டுப்புற ஆல்பத்திற் கான விருதினை cowboy carter என்ற  ஆல்பம் வென்றுள்ளது.