districts

img

புற்றுநோய் மருத்துவமனை குழந்தைகளுடன் நட்பை விரிவுபடுத்தும் குழந்தைகள்

சென்னை,ஆக.8- ‘

     அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில்’ சிகிச்சை பெறும் குழந்தைகள் சிகிச்சையின் போது பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுடன் Buddy Robots மூலம், நட்பு கரங்களை நீட்ட சென்னை பெசன்ட் நகரில் சுரானா சர்வதேச பள்ளிக் குழந்தைகள்  முன்வந்துள்ளனர். இந்த ஏற்பாட்டின் மூலம், பள்ளிசெல்லமுடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வகுப்பறை பாடங்களை கலந்துரையாடல் மூலம் ரோபோட்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  

    அவர்களின் Buddy Robots இதை சாத்தியமாக்கப் போகிறது. மாணவர்கள் யாருடன் பழகினாலும் பச்சாதாபம் மற்றும் கருணையுடன் பழக இந்த ரோபோட் கற்றுத் தருகிறது என்று சுரானா குழும நிறுவனங்களின் தலைவர்  கைலாஷ்முல் துகர் கூறினார். முன்னதாக சுரானா சர்வதேச  பள்ளியை அப்பல்லோ நிறுவனங்களின் துணைத்தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி தொடங்கிவைத்தார்.