districts

img

குப்பைக்கு வரி விதிப்பதை கைவிடுக! மாநகராட்சி ஆணையரிடம் வணிகர்கள் கோரிக்கை

சென்னை, ஜன. 10- குப்பைக்கு வரி, அபராதம் விதிப்பு  மற்றும் வணிகத்திற்கான உரிமக் கட்ட ணங்கள் உயர்வு, தொழில் வரி உள்ளிட்ட வணிகர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், வணிகர்களுக்கான இழப்புகள் குறித்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், அண்மையில் தமிழக அரசு அறிவித்துள்ள ஆண்டுக்கு 6 சதம் சொத்து வரி உயர்வு என்பது கட்டிட உரிமையாளர்களுக்கு சுமை யாக மாறி, வணிக வாடகை உயர்வுக்கு வழி வகுத்து வணிகர்களையும், நுகர் வோர்களையும் பெருமளவு பாதிக்கும் என்பதை கருத்தில்கொண்டு ஆண்டு தோறும் 6 சதம் கூடுதல் சொத்துவரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும். பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள வணிக உரிமக் கட்டணத்தை உரிய ஆய்வு செய்து திரும்பப்பெற வேண்டும். இயற்கை நீதிக்கும், சட்ட விதிகளுக்கும் முரணான தொழில் வரி மற்றும் உரிம க்கட்டண வரி என இரட்டை வரிக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும். சென்னை மாநகராட்சி சிறு, குறு, மளிகைக் கடை, பெட்டிக்கடைகள் மற்றும் டீ கடைகளுக்கு பொது குப்பை கொட்டும் இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ500 முதல் 10ஆயிரம் வரை அபராதம் விதித்து, சிறு தொழில்களை முடக்கும் நிலையை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பயன் பாட்டிற்கான மாற்றுப் பொருட்கள் முறையாக அரசால் அறிமுகப்படுத்தப் படும் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டு சட்டங்களை கடுமையாக்கக் கூடாது, விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும், தடைசெய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி நிலையிலே தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறு த்தப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையர், குப்பைக்கு அபராதக் கட்ட ணங்கள் வசூலிக்கும் நடைமுறையை உடனடியாக திரும்பப் பெறுவதாகவும், அத்துறை சார்ந்த அதிகாரிகள் வேறு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார். மேலும் உரிமக்கட்டணம் உயர்வையும் மறு ஆய்வு செய்து மாற்றி அமைக்க உறுதி யளித்துள்ளார். மாநிலத் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல், வடசென்னை கிழக்கு மாவட்ட பொறுப் பாளர் டி.காமராஜ் ஆகியோர் உடனி ருந்தனர்.