கடலூர், பிப்.7- கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவி களுக்கு கருப்பை வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு கடலூர் பெரியார் கலைக் கல்லூரி சமூகப் பணியில் துறையும் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்து வமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராம கிருஷ்ணன் சாந்தி தலைமை தாங்கினார். சமூகப் பணியில் துறைத் தலைவர் நா.சேதுராமன் வரவேற்றார். புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர்கள் செங்கதிரே சன், ஜெனிபர் பிளாரன்ஸ் மேரி, பவித்ரன், டாக்டர் லோ கேஷ் மாறன் ஆகியோர் உரையாற்றினர். அப்போது, புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங் கள், பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறை கள், நோய் சிகிச்சை முறை கள், மேலும் பொதுவான சுகாதாரத்தை மிகுந்த விழிப்புணர்வுடன் கையாள வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்து மாணவிகளுடன் கலந் துரையாடி அவருடைய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.