திருமுல்லைவாயில் பகுதியில் வசிக்கும் 60 நரிக்குறவர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஆவடி தொகுதி செயலாளர், 10ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏ.ஜான் வழங்கினார். இதில் கிளைச்செயலாளர் மோகன், பகுதிக் குழு உறுப்பினர் ராபர்ட் ராஜ், நிர்வாகிகள் திருமூலர், கோவிந்தராஜ், கண்ணன், சந்திரசேகர், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.