பாலக்காடு, 5- தடையை மீறி புதிய கேரளம் அரங்கில் பங்கேற்றதற்காக காங்கிரஸில் இருந்து முன்னாள் எம்எல்ஏவும், பெருங்கோட்டுக்குறிச்சி ஊராட்சி உறுப்பி னருமான ஏ.வி.கோபிநாத் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஒழுங்கை மீறியதற்காக அவர் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கேபிசிசி தலைவர் கே.சுதாகரன் தெரிவித்துள்ளார். புதிய கேரளம் அரங்கத்தை புறக் கணிக்க காங்கிரஸும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் முடிவு செய்துள்ளதாகவும், இதனை மீறி கோபிநாத் தீவிர அமைப்பு விரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்கு கடிதம் வரவில்லை என தெரிவித்த கோபிநாத், செவ்வாய்க்கிழமை பதில் அளிப்பதாகவும் கூறினார். பாலக்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயனுடன் கோபிநாத் கலந்து கொண்டு வளர்ச்சியில் அரசியல் இல்லை என்று கூறினார். தான் ஒரு காங்கி ரஸ்காரன் என்றும், கேரளாவின் வளர்ச்சிக் கான புதிய வழியான புதிய கேரளம் அரங்கை புறக்கணித்து நிற்க முடி யாது என்றும் அவர் கூறினார்.