districts

img

புனித பேட்ரிக் பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி

புதுச்சேரி, மே 12- 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்  புனித  பேட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவர்கள்  100 விழுக்காடு தேர்ச்சி பெற்றனர்.  2023-2024 கல்வி ஆண்டில் மார்ச் மாதம் நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி  மாணவ,  மாணவியர்கள் 242 பேர் பொது தேர்வு எழுதியிருந்தனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  இப்பள்ளியின் மாணவிகள்  அபர்ணா, தீபா ஆகியோர்  496 மதிப்பெண்களை பெற்று   பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். மாநில அளவில் 3 ம் இடமும் பிடித்துள்ளார். மாணவிகள் அமிர்தா,  நிக்ஷிதா ஆகியோர் 494 மதிப்பெண் பெற்று பள்ளி  அளவில் 2 ம் இடம் பிடித்தனர்.  மாணவி சாதனா 493 பெற்று 3 வது இடத்தையும், மாணவி நிவேதிதா 492 மதிப்பெண்களை  பெற்று 4வது இடத்தையும்  பிடித்துள்ளனர். இப்பள்ளியில் கணித  பாடத்தில் 25  மாணவர்கள் 100 விழுக்காடு மதிப்பெண் களும், அறிவியலில் 12 மாணவர்கள், சமூக  அறிவியலில் 6 மாணவர்களும் 100 க்கு100 மதிப்பெண்கள்  பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு பாராட்டு பள்ளி தாளாளர் ரெஜிஸ் பிரடெரிக், மருத்துவ  இயக்குநர் ஜீத்தா பிரடெரிக்,  முதல்வர் அல்பென்ஸ்  ஹில்டா, ஆலோ சனை குழு உறுப்பினர்கள், வகுப்பு  ஆசிரியர்கள் கல்பனா,  முத்துக்குமரன்,  சோபியா, பாலன், அலெக்ஸ்,  பெலிக்ஸ் ஆகியோர் 10 ஆம்  வகுப்பு பொதுத் தேர்வில்   பள்ளிக்கு பெருமை சேர்த்த  மாணவர் களுக்கு நினைவுப் பரிசு பாராட்டினார்கள்.