விமான சேவைகள் பாதிப்பு
சென்னை, டிச.7- சென்னையில் மிக்ஜம் புயலால் கடந்த ஞாயிறு இரவு முதல் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரண மாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை விமான சேவை பாதிக்கப்பட்டது. புதனன்று பயணிகளின் எண்ணிக்கை குறைவு மற்றும் விமானிகள் பணிக்கு வராத காரணத்தால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் வில்லிவாக்கம், அயனா வரம், எழும்பூர், நுங்கம்பாக்கம், ஐயப்பாக்கம், போரூர், கிண்டி, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதி களில் வியாழனன்று காலை கடும் பனிமூட்டம் நிலவி யது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமா னங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானத்தி லேயே வட்டமிடும் சூழல் ஏற்பட்டது. அதேபோல் சென்னை யில் இருந்து மதுரை, கோவை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்களும் புறப்படு வதில் தாமதம் ஏற்பட்டது.
வாலிபர் பலி: நிவாரணம் வழங்க கோரிக்கை
சென்னை, டிச. 7 - மிக்ஜம் புயலில் மரம் விழுந்து உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் துறைமுகம் பகுதிச் செயலாளர் எம்.ஜலாலுதீன் விடுத்துள்ள அறிக்கையில், 56வது வட்டம் பிஆர்என் கார்டனில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆர். ஆனந்த் (வயது39). மிக்ஜம் புயலுன்று (டிச.4) மரம் விழுந்து காயமுற்றார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி டிச.5 அன்று கால மானார். ஆட்டோ ஓட்டுநராக இருந்த ஆனந்திற்கு, சிறு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். எனவே, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியியிருந்து அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மின் சிக்கனம்: மாணவர்களுக்கு போட்டி
வேலூர், டிச.7 - ஒன்றிய அரசின் திறன் நோக்க செயலகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவி யல் இயக்கம் ஆகியவை இணைந்து கடலூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி களில் ‘மின் சிக்கனம், மின் பாதுகாப்பு’ குறித்து விழிப் புணர்வு மற்றும் ‘ஆற்றல் மன்றம்’ தொடங்குவதற்கு பயிற்சி அக்டோபரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டு மாவட்டங்களிலும் 120க்கு மேற்பட்ட பள்ளி களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத் தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மின்சார துறை அதி காரிகள் கலந்து கொண்ட னர்.
தீபாவளி சீட்டு மோசடி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விழுப்புரம், டிச.7 - விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி சீட்டு மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே. அறிவழகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் பி.சிவராமன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.நாகராஜன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.வீரமணி, அபிமன்னன் ஆகியோர் கொண்ட குழுவினர் பனை மரம் ஏறும் விவசாய சங்க தலைவர் சிவகுமார் தலைமையில் சந்தித்தனர். விக்கிரவாண்டியை சேர்ந்த முருகன் மகன் பாலச்சந்திரன் என்பவர் ஆலயம் ஜூவல்லர்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் தீபாவளி நகை மற்றும் பலகார சீட்டு பிடித்துள்ளார். 1 வருட காலம் பணம் செலுத்தினால், தீபாவளிக்கு முன்பு தங்க நாணயம், வெள்ளி நாணயம், இனிப்பு மற்றும் கார வகைகள், பட்டாசு பாக்ஸ் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள ஜவுளி கூப்பன் வழங்குவதாக கூறியுள்ளார். அதை நம்பி வெம்பி மற்றும் பூரி குடிசை பகுதியை சேர்ந்த பெண்கள் 2021 நவம்பர் 10 ஆம் தேதியிலிருந்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 10 வரை மாதத் தவணையில் ரூ. 1000 முதல் 2 ஆயிரம் வரைக்கும் கட்டி வந்துள்ளனர். சீட்டு முடிந்ததும் தரவேண்டிய தங்க நாணயம், வெள்ளி நாணயம், இனிப்பு-காரவகைகள்,பட்டாசு பாக்ஸ் மற்றும் ரூ. 5000 மதிப்புள்ள ஜவுளி கூப்பன் ஆகிய வற்றில் எதையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள், “ இந்த விவகாரத்தில் மாவட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியில் ஈடுபட்ட குற்ற வாளிகளை கைது செய்து, பாதிக்கப் பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். தீபாவளி சீட்டு கட்டிய மக்கள் இந்த ஆண்டும் மாற்றப்பட்டுள்ளனர். இது விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கதையாக மாறியுள்ளது. எனவே, காவல்துறை அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.
750 ஏக்கர் நெற் பயிர் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
ராணிப்பேட்டை, டிச.7 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த தொடர்மழை மற்றும் மிக்ஜம் புயலால் ஆற்காடு, நெமிலி, அரக்கோணம், கலவை, வாலாஜா, சோளிங்கர் வட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 750 ஏக்கர் நெற் பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்து முளைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில், மாவட்ட அதிகாரிகள் சில பகுதிகளில் பார்வையிட்டுள்ளனர். எனினும் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் புயல், வறட்சி பாதிப்புக்களுக்கு அனைத்து பகுதி விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, இந்த முறை பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 50,000 நஷ்ட ஈடும் மழைக்கால நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு, செயலாளர் எல்.சி.மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடலூரிலிருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள்
கடலூர், டிச.7 - மிக்ஜம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் கருதி கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1081 கிலோ பால் பவுடர், 21,550 பிரட் பாக்கெட்டுகள், 16,784 ரொட்டி பாக்கெட்டுகள், 33,508 குடிநீர் பாட்டில்கள், 150 ஜாம் மற்றும் பண்பாக் கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மெழுகு வர்த்திகள், தீப்பெட்டிகள்,போர்வைகள் மற்றும் துணிகளையும் அனுப்பி வைத்தனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை யில் நீரை வெளியேற்றுவதற்கு 10 முதல் 10 குதிரைத் திறன் கொண்ட மோட்டார்கள், மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், இயந்திரங்கள் இயக்குபவர் என 10 பணியாளர்கள் நீரை அகற்றும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 190 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் மேற்கொள்ள கடலூர் மாவட்டத்திலிருந்து நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.