districts

img

வேளாண் கல்லூரி மாணவர்கள் டிரோன் தொழில்நுட்ப பயிற்சி

செங்கல்பட்டு, பிப்.14- செங்கல்பட்டு மாவட்டம், வெடால் கிராமத்தில் எஸ்.ஆர்.எம். வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்ட ரோஜர்ஸ் குழு மாணவர்கள் அஸ்ட்ராக்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் டிரோன் தொழில்நுட்ப பயிற்சி மேற்கொண்டனர்.  விவசாய நிலங்களுக்கு உரங்களை எடுத்துச் செல்ல தேவையான பாதைகள் இல்லாததால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தனர். இந்த சிக்கலைத் தீர்க்க டிரோன் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு மாணவர்கள் விளக்கினர். மாணவர்கள் டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் முறையை நேரடியாக காண்பித்தனர். இந்த தொழில்நுட்பம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் வேலைசெய்யும் திறனை கொண்டதுடன், விவசாய செலவுகளை குறைக்கும் என்பது விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உராட்சி மன்றத் தலைவர் முத்தமிழ் பாக்கியநாதன், மகேந்திரன், முத்துக்குமரன் (வேளாண் அலுவலர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.