சென்னை, ஜூலை 23 -
தமிழ்நாடு அரசு அக்குபஞ்சர் கவுன்சில் அமைக்க வேண்டுமென்று அக்குபஞ்சர் சிகிச்சையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் சங்கத் தின் சென்னை மண்டல 4வது மாநாடு ஞாயிறன்று (ஜூலை 23) தேனாம்பேட்டை யில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான அக்குபங்சர் சிகிச்சையாளர்கள் செயல்பட்டு வருகின்ற னர். இவர்களுக்கு தொழில், சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். இதற்காக மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் உள்ளது போல், தமிழகத்திலும் அக்கு பங்சர் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டிற்கு மண்டலத் தலைவர் கே.எஸ்.தாமோதரன் தலைமை தாங்கினர்.
துணைத் தலைவர் பி.சந்திரன் வரவேற்றார். முன்னாள் மண்டலச் செயலாளர் பி.பார்த்தி பன் கொடியேற்றினார். மாநில பொதுச்செய லாளர் எம்என்பி ரமேஷ்பிரபு தலைமை தாங்கினார்.
மண்டலச் செயலாளர் எம்.ஜி.சுந்தரம் செயல்பாட்டு அறிக்கையும், பொருளாளர் ஜி.கன்னியப்பன் வரவு செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். மாநிலத் தலைவர் மு.கோதண்டராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் வி.தன பாக்கியம் நன்றி கூறினார். மண்டலத் தலைவராக பி.பாலாஜி, செய லாளராக எம்.ஜி.சுந்தரம், பொருளாளராக சங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.