சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ள வருமான வரித்துறையின் நடவடிக்கையை கைவிடவும், நிலுவையில் உள்ள மற்றும் உரிய மானியத்தை தொடர்ந்து தமிழக அரசு அளிக்கவும் வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.23) பல்கலை. வளாகத்தில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நலச்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.