கள்ளக்குறிச்சி, ஏப்.5 - உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணம் இழந்த இளை ஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே வண்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிர மணி மகன் ஜெயராமன் (27). டிப்ளமோ படித்த இவர் ஆன்லைன் ரம்மி விளை யாட்டில் மோகம் கொண் டுள்ள நிலையில் கடன் வாங்கி பல லட்ச ரூபாய் இழுந்துள்ளதாக கூறப்படு கிறது. இதனால் மன முடைந்து காணப்பட்ட ஜெயராமன் தான் தற்கொலை செய்ய போவதாக பெற்றோருக்கு தொலைபேசியில் வாட்ஸ்அப் ஆடியோ அனுப்பி விட்டு நள்ளிரவு வீட்டிற்கு எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத் திற்கு சென்று ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறை யினர் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல லட்ச ரூபாய் கடன் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதால் மன முடைந்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஆன்லைன் ரம்மி விளை யாட்டில் பல லட்சம் பணம் இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.