districts

img

துப்பாக்கி குண்டு பாய்ந்து கல்பாக்கத்தில் பாதுகாப்பு படை வீரர் பலி

கல்பாக்கம், மே 19- செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலை யத்தின் பாதுகாப்பு பணி களில் சிஐஎஸ்எப் பிரிவை சேர்ந்த வீரர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டு வரு கின்றனர். சனிக்கிழமை அன்று (மே18) இரவு நேர பாதுகாப்பு பணிகளை முடித்து 40 சிஐஎஸ்எப் வீரர்கள் தலைமை அலுவலகத்துக்கு பேருந்தில் திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது, சதுரங்கப்பட்டினம் கோட்டை அருகே சாலை யில் பேருந்து வந்து கொண்டிருந்த போது, வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியதாக தெரிகிறது.  அப்போது, துப்பாக்கி யுடன் பேருந்தில் பயணித்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரவிகிரண்(37) என்ப வரின் துப்பாக்கி தவறு தலாக வெடித்ததில் கூறப்படு கிறது. இதில், எஸ்ஆர்எல் என்ற துப்பாக்கியில் வெளியே வந்த குண்டு அவரின் வலது பக்க கழுத்தில் பாய்ந்தது. இதில், காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். தகவல் அறிந்த கல்பாக்கம் போலீசார் மற்றும் சிஐஎஸ்எப் அதி காரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.  மேலும், உடலை மீட்டு கல்பாக்கம் நகரியப்பகுதி யில் உள்ள அணுசக்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;