சென்னை, அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் பகிர்ந்த பணியிடம் அமைக்கப்பட்டு, நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். மேயர் ஆர்.பிரியா ராஜன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.