மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாரூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய தலைவர் கோட்டீஷ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், பொருளாளர் வெண்ணிலா, மாவட்ட செயலாளர் பெரியசாமி, வட்டச் செயலாளர்கள் ஊத்தங்கரை மகாலிங்கம், பேச்சம்பள்ளி சாமு, புனிதா, தாமரைசெல்வி கலந்து கொண்டனர்.