சென்னை,மார்ச் 13- சிமாட்ஸ் பொறியியல் கல்லுாரி தமிழ் மன்றம் சார்பில் இந்த வாரம் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதி காரத்தில் வஞ்சிக் காண்டம் பகுதிகள் குறித்து கலந்துரை யாடல் நடைபெற்றது. வஞ்சிக் காண்டத்தில் வஞ்சி மாநகரில் சேரன் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல் எடுத்து கண்ணகிக்கு கோவில் அமைக்கும் நிகழ்வுகள் உரை யாடலில் இடம் பெற்றன. சிமாட்ஸ் பொறியியல் கல்லுாரிப் பேராசிரியர்களான பாஷா, செந்தில் ஐயா மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர் செல்வி சிலப்பதிகாரம் குறித்த தங்களது பன்முகப் பார்வையை வெளிப்படுத்தினர்.