புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினம் திங்களன்று (ஜன. 30) அனுசரிக்கப்பட்டது. கடற்கரைசாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தியின் 75ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அவரது படத்திற்கு தாளாளர் குமார் தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.