மாநகர பேருந்துகளில் பயணிக்க பயண அட்டை
சென்னை, ஜன.6- மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனை யில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூலம் சிங்கார சென்னை பயண அட்டையை திங்களன்று (ஜன.6) பொது மக்கள் பயன்பாட்டிற்கு போக்கு வரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். சிங்கார சென்னை பயண அட்டையானது, பயணி களுக்கு தடையற்ற மற்றும் பணமில்லா பரிவர்த்தனை பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்கு திட்ட மாகும். இவ்வட்டையை பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரி வர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம், இந்த முயற்சியானது, தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன மயமாக்குவதற்கான தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகளில் ஒன்றாகும். மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்து களிலும், ஏற்கெனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், இடிஎம் உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 அட்டைகள் எஸ்பிஐ மூலம் கட்டணமின்றி வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.46 லட்சம் வாக்காளர்கள்
கள்ளக்குறிச்சி, ஜன.6- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11,46,850 வாக்காளர்கள் உள்ளனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திங்களன்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தன லட்சுமி, வருவாய் கோட்டாட்சி யர்கள், வட்டாட்சியர், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனி ருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 27 லட்சத்து 47 ஆயிரம் வாக்காளர்கள்
செங்கல்பட்டு, ஜன. 6- செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 27,47,550 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் ச. அருண்ராஜ் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சுருக்கு முறை திருத்தம் 2025 பணிகள் நடைபெற்று கடந்த ஆண்டு அக். 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பரில் 4 சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்கு சாவடிகளிலும் நடைபெற்று நீக்கல் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் குறித்து நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 98,701 படிவங்கள் பெறப்பட்டது. இதில் 97,444 படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆட்சியர் ச.அருண்ராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை திங்களன்று (ஜன.6) வெளியிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சார் ஆட்சியர் (பயிற்சி) மாலதி ஹெலன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) காஜா சாகுல் அமீது மற்றும் அங்கீகரிக்கப்பட்டதிமுக, அதி முக, தேமுதிக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமு கர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவை தொகுதி கள் உள்ளன. இதில் ஆண்கள் 13,57,923, பெண்கள் 13,89,146, இதரர் 481 என மொத்தம் 27,47,550 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். மேலும் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,90,958 வாக்காளர்கள் இருக்கின்றனர். 18-19 வயதுடையோர் 37,749 வாக்காளர்கள் உள்ளனர். இதையடுத்து புதிய வாக்காளர்க ளுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ஆம் தேதி முதல் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் வருவாய் கோட்ட அலுவலகங்கள் வட்டாட்சியர் மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். மேலும் தொடர் திருத்தம் நடைபெறுவதால் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் தொடர்பான மனுக்களை பொது மக்கள் அளிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டார். தொகுதிகள் விவரம் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் 3,45,184 ஆண் வாக்காளர்களும் , 3,45,645 பெண் வாக்காளர்களும், 129 இதர வாக்காளர்கள் என 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதியில் 2,18,573 ஆண் வாக்காளர்களும் , 2,21,859 பெண் வாக்காளர்களும், 45 இதர வாக்காளர்கள் என 4,40,477 வாக்காளர்கள் உள்ளனர். தாம்பரம் சட்டப்பேரவை தொகுதி யில் 2,03,675 ஆண் வாக்காளர்களும் 2,07,481 பெண் வாக்காளர்களும், 71 இதர வாக்காளர்கள் என 4,11,227 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதியில் 2,13,950 ஆண் வாக்காளர்களும் , 2,22,125 பெண் வாக்காளர்களும், 66 இதர வாக்காளர்கள் என 4,36,141 வாக்காளர்கள் உள்ளனர். திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் 1,53,425 ஆண் வாக்காளர்களும் , 1,59,458 பெண் வாக்காளர்களும், 56 இதர வாக்காளர்கள் என 3,12,939 வாக்கா ளர்கள் உள்ளனர். செய்யூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 1,10,931 ஆண் வாக்காளர்களும் , 1,15,219 பெண் வாக்காளர்களும், 23 இதர வாக்காளர்கள் என 2,26,173 வாக்கா ளர்கள் உள்ளனர். மதுராந்தகம் (தனி) சட்டப் பேரவை தொகுதியில் 1,12,185 ஆண் வாக்காளர்களும் , 1,17,359 பெண் வாக்காளர்களும், 91 இதர வாக்காளர்கள் என 2,29,635 வாக்காளர்கள் உள்ளனர்.
பெ. சண்முகத்திற்கு டியுஜே வாழ்த்து
சென்னை, ஜன.5 விழுப்புரத்தில் நடை பெற்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், தமிழ்நாடு மாநில செயலாள ராக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர், பெ.சண்முகம் அவர்களுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் (டி.யு.ஜே.) வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பி.எஸ்டி. புருஷோத்தமன் விடுத்துள்ள அறிக்கையில், மாணவர் இயக்கத்தின், தலைவராக, விவசாயிகள் இயக்கம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஒப்பற்ற தலைவர் மத்தியகுழு உறுப்பினர், பெ.சண்முகத்திற்கு என் சார்பிலும், தோழர் பி.எஸ்.டி குடும்பத்தின் சார்பிலும், டியூஜெ சார்பிலும், இதய பூர்வ, வாழ்த்துக்கள் தெரி வித்துக் கொள்வதாக கூறி யுள்ளார். சாதி, மதம், இனவெறியை தமிழ கத்திலிருந்து அகற்ற, விவசாயிகள், தொழி லாளர்கள், அனைத்து பகுதி மக்களின் நலன் காக்கும் போராட்டத்தில், பத்திரிகை - ஊடகவியலாளர்கள், உங்களுடன் இணைந்து பயணிப்போம் என்றும் புரு ஷோத்தமன் கூறியுள்ளார்.
சாலை பாதுகாப்பு பேரணி கள்ளக்குறிச்சி ஆட்சியர் துவக்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி, ஜன.6 - தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனத் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் பிரசாந்த் திங்களன்று (ஜன.6) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணி, கச்சிராயபாளையம் சாலை வழியாக நான்கு முனைச் சந்திப்பு, தியாகதுருகம் சாலை வழியாக சென்று ஏ.கே.டி பள்ளி அருகில் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி, கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வம்,ராஜ்குமார், ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கார் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி
திருத்தணி, ஜன.6- திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த டிராக்டர், கார் மீது மோதியதில் ஒருவர் பலியானார். காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் பகுதியை சேர்ந்த சுதாகர் ( 44) காரை ஓட்டி வந்துள்ளார் .இவரது மனைவி கோதைநாயகி, மகள் தக்ஷனா (18) மகன் சுதர்சன் ஆகி யோர் அந்த காரில் வந்துள்ளனர். இவர்கள் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த போது இவர்களது கார் கரும்பு டிராக்டருடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டிராக்டர் முன்பக்கம் முழுவதுமாக சேதம் அடைந்தது . கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த சுதாகர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸருக்கு தகவல் அளித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் உடனடியாக படுகாயம் அடைந்த மூவரையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுதாகர் பிரேதத்தை பார்த்து அவரது இரண்டு குழந்தைகளும், மனைவியும் கதறி அழுதனர்.