districts

வாகன சோதனையில் 18 ரவுடிகள் கைது

சென்னை, ஏப்.16 - தாம்பரம் காவல் எல் லைக்குட்பட்ட பகுதியில்  நடைபெற்ற வாகனச்சோத னையில் 18 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் பகுதிகளில் குற்றச் செயல்களை தடுக்க  காவல் துறையினர் அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளி இரவு முதல் சனிக் கிழமை காலை வரை தாம்ப ரம் எல்லைக்குட்பட்ட பகுதிக ளில் விடிய விடியவாகன சோதனை நடத்தினர். இதில் தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகள் என  18 பேர் பிடிபட்டனர்.  இந்த சோதனையின் போது கார்,  மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 1733 வாகனங் கள் சோதனை செய்ததில் விதிமுறைகளை மீறிய பலரும் பிடிபட்டனர். மது போதையில் வாகனத்தை ஓட்டிய 20 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவணங்கள் இன்றி வாக னங்களை ஓட்டிய 140 பேரும்,  வேகமாக சென்ற 5 பேரும் பிடிபட்டனர். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 20 பேரும் சிக்கினர்.