தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் 10-வது மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதற்குசங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் பி.கதிர்வேல் தலைமையில் தாங்கினார். இதில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார், மாநில துணைத்தலைவர் கே.விஜயன், சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன், சிஐடியு மாநில செயலாளர் கே.ரங்கராஜ், சம்மேளனத்தின் மாநில செயலாளர் பி.சீனிவாசலு, சிஐடியு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.