districts

img

பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை

விழுப்புரம்,ஆக.23-

     பெண்ணை வன்கொடுமை செய்தவருக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா புதுப் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 30). அவரது பாட்டி அதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணிடம் தனது வீட்டில் புளியங்கொட்டை இருப்ப தாகவும், அதை அள்ளிச் செல்லும் படியும் கூறியுள்ளார்.  

    அதன்படி அந்த பெண், புளியங்கொட்டையை எடுக்கச்சென்ற போது அங்கு தனியாக இருந்த அய்யனார், வீட்டின் கதவை பூட்டி அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு  செய்தார். இதுபற்றி தனது பெற்றோரிடம்  அவர் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தாய், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனாரை கைது செய்தனர்.

     இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட அய்ய னாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

     மேலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால் அவரது தாய்க்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.