districts

img

1.11 லட்சம் குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு விழுப்புரத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

விழுப்புரம், ஜூன் 12-

      தமிழ்நாட்டில் 1.11 லட்சம் குழந்தை களுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரி வித்தார்.

   விழுப்புரம் நகராட்சிகுட்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் 6 மாதம் முதல் 6 வயது வரை கடுமையான ஊட்டச்சத்து குறை பாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப் பட்ட பிஸ்கட் வழங்கி திட்டத்தை திங்களன்று (ஜூன் 12) உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

   இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததியர்கள் மற்றும் குழந்தைகளின் நலனை காத்திடும் வகையில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.  

    அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது”என்றார்.

    தமிழ்நாட்டிலுள்ள அங்கன்வாடி மையங்களில் 36 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்ற னர். இக்குழந்தைகளுக்கு மருத்துவத் துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,11,000 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து பாணாம் பட்டில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு இல்லத்தில் தங்கியுள்ள முதி யோர்களிடம் இல்லத்தில் தங்களுக்குண்டான வசதிகள் உணவு கள் மற்றும் மருத்துவ தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் முண்டியம்பாக்கத்திலுள்ள சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  

   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஆட்சியர் பழனி ஆகியோர் தலைமை வகித்தனர். எம்எல்ஏக்கள் விழுப்புரம் லட்சுமணன், விக்கிரவாண்டி புகழேந்தி, மயிலம் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.