districts

img

150 கார்ப்பரேட் நிறுவன குழுமங்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி அரசு

சிவகங்கை, ஏப்.11- சிவகங்கை நாடாளுமன்றத் தொ குதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காரைக்குடி ஐந்துவிளக்கு பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் புதனன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டச் செயலா ளர் கருப்புச்சாமி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் அழகர்சாமி வரவேற்றார். 

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘திமுக தலைமையி லான ‘இந்தியா’ கூட்டணி தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜக டெபாசிட்டை இழக்கும். 

இந்தியா முழுவதும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் கள் பலர் தேர்தலிலிருந்து விலகுவ தாக அறிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் பாஜகவுக்கு பாதகமான சூழ்நிலைதான் உள்ளது. 

கடந்த பத்தாண்டு மோடி ஆட்சி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மழை- வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை. ஆனால், பிற நாடுகளிடமிருந்து ரூ.90 லட்சம் கோடி கடன் வாங்கிய மோடி, விவசாயி களின் கடனையோ, மாணவர்களின் கல்வி கடனையோ தள்ளுபடி செய்யா மல், 150 கார்ப்பரேட் நிறுவன குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் மோடிக்கு பயந்து சிறு பான்மை மக்களுக்கு விரோதமான சட்டம் நிறைவேற காரணமானவர் தான் எடப்பாடி பழனிசாமி. தற்போ தும் கூட மோடியை எதிர்த்து எடப்பாடி பேச மறுக்கிறார். 

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தவுடன், விவசாயிக ளுக்கு எதிரான சட்டங்கள் ரத்தாகும்’’ என்று கூறினார்.

கூட்டத்தில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர் சாமி. திராவிடமணி, சிபிஐ மாவட்டச் செயலாளர் நா. சாத்தையா, பிஎல்.ராமச்சந்திரன், ஆம் ஆத்மி கட்சி மாவட்டச் செய லாளர் அரசு சோமன் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

140 கோடி மக்களை ஏமாற்றிய மந்திரவாதி மோடி

கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘‘பாஜக அரசு ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்துள்ளது. எனவே மோடி ஆட்சியை மக்கள் குழி தோண்டி புதைக்க வேண்டும். தியாகங்கள் செய்து மீட்டெடுத்த சுதந்திரத்திற்கு இன்று மோடி முடிவுரை எழுதி இருப்பதைப் போன்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கி றார். 140 கோடி இந்திய மக்களை ஏமாற்றிய மந்திரவாதி, தந்திரவாதி தான் மோடி. தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை 5% பேருக்கு மட்டுமே கொடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிந்ததும் அவர்களுக்கு கொடுப்ப தற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்று பேசினார்.