districts

img

மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெறு சிஐடியு இன்ஜினியரிங் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 11 -  விவசாய விரோத சட்டங்களை உடனடி யாக திரும்பப்பெற வலியுறுத்தி கோவை யில் சிஐடியு இன்ஜினியரிங் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள், தொழிலாளர்கள், மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் சிஐடியு இன்ஜினியரிங் சங்கத் தின் சார்பில் துடியலூர் பேருந்து நிலை யம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இன்ஜினியரிங் சங்க மாவட்ட பொரு ளாளர் ஏ.ஜி.சுப்பிரமணி தலைமையில் நடை பெற் இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சிறப்பு ரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் யு.கே.வெள்ளிங்கிரி, இன்ஜினியரிங் சங்க செயலாளர் சி.துரைசாமி,  சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி ஆகி யோர் கண்டன உரையாற்றினார்.  இதில், ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசின் நாசகர சட்டங்களை கண்டித்து  ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

;