திருப்பூர், ஜன.31- மதச்சார்பின்மையை பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஊத்துக்குளியில் வாலிபர் சங்கம் சார்பில் செவ்வா யன்று நடைபெற்றது. தேசத் தந்தை மகாத்மா காந்தி நினைவு தின அஞ்சலி மற் றும் மதச்சார்பின்மையை பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத் தத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. வாலிபர் சங்க தாலுகா தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தாலுக்கா செயலாளர் பாலமுர ளி உரையாற்றினார். தாலுகாப் பொருளாளர் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆர்.எஸ் கிளை நிர்வாகி நாகராஜ் நன்றி கூறினார்.