உடுமலை, ஆக. 8- கேரள மாநிலம், வயநாட் டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநில மைய முடிவின் படி, தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப் பணி யாளர் சங்கத்தின் சார்பில் ரூ.4,506 நிதி வசூல் செய்யப் பட்டு, அரசு ஊழியர் சங்கத் தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார் பில் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடம் வயநாட்டில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டப் பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் தாராபுரம் கோட்ட மாநாடு உடு மலையில் புதனன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளி டம் துண்டு ஏந்தி நிதி வசூல் செய்யப்பட்டது. இதில், வசூலிக்கப்பட்ட ரூ.4.506 நிதியை அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், வியாழன், வெள்ளி என இரண்டு நாட்கள் உடுமலை கச்சேரி வீதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு ஊழியர்களிடம் நிதி வசூல் செய்யப்படுகிறது.