districts

img

பாதை வசதி கேட்டு காத்திருப்புப் போராட்டம்

நாமக்கல், ஜன.27- பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை ஊராட்சியில், குடிய ரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது  பாதரை, வேப்பங்காடு, மற்றும் வெள்ளியங் காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள், தங்கள் வசிக்கும் பகுதியில் போதிய பாதை வசதி இல்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி திடீரென காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து  அப்பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் கூறுகையில், வேப்பங்காடு, வெள்ளியங் காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் எங்கள் வீடுகளுக்கு செல் லும் ஒரே பாதையில் பாதரை மயானம் முதல் ஆனங்கூர் எல்லை வரை உள்ள பகுதியை  சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குழந்தை கள் பள்ளிக்கு செல்ல, பெரியவர்கள் மருத் துவமனை மற்றும் விவசாயப்பணிகளுக்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டுமென பல முறை கிராம நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரி களுக்கும் மனு அளித்தும் எவ்வித நடவடிக் கையும் எடுக்காததால் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து பள்ளிபாளையம் அக்ர ஹாரம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட  அரசுத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர் களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மூன்று தினங்களுக்குள் நில அளவீடு செய் யபட்டு, நிலம் அளக்கப்பட்டு ஆக்கிரமிப்பு இருந்தால் உரிய அதிகாரிகளின் மேற்பார் வையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென் றனர்.