ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை அச்சத்தில் கிட்டம்பட்டி கிராமமக்கள்
தருமபுரி, ஜன.2- பாலக்கோடு அருகே பட்டியிலிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று வேட்டையாடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள கிட் டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவராஜ் (40). இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலை யில், செவ்வாயன்று அதிகாலை 4 மணியளவில் பட்டியிலி ருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. அதனைத்தொடர்ந்து சிறுத்தையின் உறுமல் சத்தமும் கேட்டுள்ளது. இதனால் வெளியே வர பயந்த சிவராஜ், செல்போன் மூலம் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இதையடுத்து 10க்கும் மேற்பட்டோர் வருவதை கண்ட சிறுத்தை அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதைத்தொடர்ந்து பட்டியில் சென்று பார்த்த போது 4 ஆடுகளை சிறுத்தை வேட்டையாடியது தெரிய வந்தது. இது குறித்து சிவராஜ் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரி வித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை யினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து அருகில் குழி தோண்டி புதைத்த னர். மேலும், இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நட வடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கிரா மத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். விரைந்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
கிணற்றில் குதித்து புதுமணத் தம்பதி தற்கொலை
சேலம், ஜன.2- வாழப்பாடி அருகே புதுமணத் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவியும், கணவனும் அடுத்த டுத்து கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள துக்கி யாம்பாளையம் ஊராட்சி, மாரியம்மன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன் (27). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், சி.பி.வலசு சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி (19) என்பவருக்கும், கடந்த 3 மாததத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திங்களன்று இரவு இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமு டைந்த இளம்பெண் அபிராமி, தற்கொலை செய்து கொள்வ தற்காக, திங்களன்று நள்ளிரவு 12 மணியளவில் அருகிலுள்ள விவசாயி மாணிக்கம் என்பவரது தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்ட அவரது கணவர் அருள்முரு கனும் அதே கிணற்றில் குதித்துள்ளார். இதனால், இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வா ளர் பாஸ்கரபாபு தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதன்பின் வாழப்பாடி தீய ணைப்பு படையினர் துணையுடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி, புதுமணத் தம்பதியான அருள்முருகன், அபிராமி இருவரது உடலையும் செவ்வாயன்று அதிகாலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆனதால், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி காவல் துறையினர், சேலம் கோட்டாட்சியர் மற்றும் வாழப்பாடி துணை காவல் கண்கா ணிப்பாளர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இச்சம் பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி
சேலம், ஜன.2- ஜலகண்டாபுரம் அருகே அடையாளம் தெரியாத விலங்கு கடித்ததில், பட்டியிலிருந்த 5 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் அருகே உள்ள செல்லப்பனூர், காட்டுவளவு பகுதியைச் சேர்ந் தவர் மல்லிஸ்வரி (55). விவசாயியான இவர், ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் திங்க ளன்று இரவு ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு அருகே உள்ள பட்டியில் 6 ஆடுகளை அடைத்துவிட்டு உறங்கச் சென் றுள்ளார். இதையடுத்து செவ்வாயன்று காலை வந்து பார்த்த போது, விலங்கு ஒன்று கடித்துக் குதறியதில், 5 ஆடுகள் பரிதா பமாக உயிரிழந்து கிடந்தன. இதையடுத்து காயமடைந்த ஆடு களுக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டது. மேலும், இறந்து போன ஆடுகள் அப்பகுதியில் புதைக் கப்பட்டன. இறந்து போன ஆடுகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என மூதாட்டி மல்லிஸ்வரி தெரிவித்தார். மேலும், இப்பகுதியில் அடிக்கடி நடைபெற்று வரும் இது போன்ற சம்பவங்களால் விவசாயிகள் அச்சமடைந்துள்ள னர்.
விபத்துகளை தடுக்க “பிளிங்கர்கள்” அமைப்பு
தருமபுரி, ஜன.2- தருமபுரி, தொப்பூர் பகுதியில் விபத்து களை தடுக்கும் விதமாக 35 இடங்களில் “பிளிங்கர்கள்” அமைக்கப்பட்டுள்ளதாக வட் டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்துள்ளார். தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில், தொப்பூர் அருகே உள்ள கட்டமேடு முதல் இரட்டை பாலம் வரை அதிகளவில் ஏற்படும் விபத்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பொருட்சேதமும் ஏற்படுவது தொடர்கதை யாகி வருகிறது. விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் விபத்துகளும், உயிரிழப்புகளும் சற்றே குறைந்தாலும் முழுவதுவமாக குறைய வில்லை. இதுகுறித்து வட்டார போக்குவ ரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், விபத்துகளை குறைக்கும் நோக்கில் கட்ட மேடு முதல் இரட்டை பாலம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஔிரும் மின் விளக்குகள் (பிளிங்கர்கள்) தனியார் நிதியுத வியில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்டுள்ளது. இதில் 30 பிளிங்கர்கள் செயல் படுகிறது. 5 பிளிங்கர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்து 2 நாட்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இத னால் விபத்துகள் பெருமளவு குறையும், என்றார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு: வெல்லத்தையும் சேர்த்திடுக
தருமபுரி, ஜன.2- தமிழ்நாடு அரசு சார்பில், மக்களுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத்தொகுப் பில் வெல்லத்தையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தரு மபுரி மாவட்டத்தில் வெல்லம் தயாரிப்பு களைக்கட்டியுள்ளது. கடக்கத்தூர், சோகத் தூர், பாப்பரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் அதிகமான உருண்டை வெள்ளம் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆலையிலும் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் ஆகிய மாவட்டங் களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகி றது. மேலும், அண்டை மாநிலங்களான கர்நா டகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்க ளூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரா விற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன் னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம டைந்துள்ளது. எனவே, பொங்கல் பரிசுத்தொ குப்பில் வெல்லம் சேர்த்து அரசு வழங்க வேண்டும் என வெல்ல உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதைப்போல வெல் லத்தை வெளிமாநிலங்களில் இருந்து அல்லா மல் உள்ளூரிலேயே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் வலியு றுத்தியுள்ளனர்.
நாளை “மக்களுடன் முதல்வர்” முகாம்
சேலம், ஜன.2- “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத் தில் 14 ஆவது நாளான வியாழனன்று (நாளை) 9 இடங்க ளில் முகாம்கள் நடைபெறவுள்ளதென மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் 14 ஆவது நாளான வியாழனன்று (நாளை) சேலம் மாநகராட்சி, 28 ஆவது வார்டுக்குட்பட்ட வர்களுக்கு பெரிய எழுத்துகாரர் தெருவில் உள்ள துளுவ வேளாளர் திருமண மண்டபத்திலும், 42 ஆவது வார்டுக் குட்பட்டவர்களுக்கு ஸ்ரீநடராஜர் குலாளர் திருமண மண்ட பத்திலும், 30 ஆவது வார்டுக்குட்பட்டவர்களுக்கு தர்மசத்தி ரம், செவ்வாய்ப்பேட்டை மாணிக்கம் தெருவில் உள்ள பாண்டு ரங்கநாதர் கோவில் அருகிலும், 58 ஆவது வார்டுக் குட்பட்டவர்களுக்கு ஆறு நாட்டு வெள்ளாளர் திருமண மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளன. மேலும், தாரமங்கலம் நகராட்சி, 7, 8, 9, 14 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட வர்களுக்கு பொன்னுசாமி திருமண மண்டபத்திலும், ஆத்தூர் நகராட்சி, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட வர்களுக்கு முள்ளுவாடி எல்.ஆர்.சி திருமண மண்டபத் திலும், ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்குட்பட்டவர்களுக்கு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள நாடார் உறவினர் முறை திருமண மண்டபத்திலும், அரசிராமணி பேரூராட்சிக் குட்பட்டவர்களுக்கு குள்ளம்பட்டி சமுதாயக் கூடத்திலும், சன் னியாசிகுண்டு கிராம ஊராட்சிக்குட்பட்டவர்களுக்கு சன்னி யாசிகுண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தி லும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
காரில் ஏற்பட்ட தீ விபத்து
திருப்பூர், ஜன.2- திருப்பூர் அருகே செங்கப்பள்ளி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தால் பர பரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அருகே சாலையில் மாருதி 800 ரக காரின் முன்பக்க பகுதியிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனைக்கண்டு காரில் வந்தவர்கள் கீழே இறங்கினர். பின்னர் திடீரென கார் தீப்பற்றி எரிந்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. வேகமாக கார் முழுவதும் தீ பரவத் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி தீயைணைப்பு துறையினர் தீயை அணைத் தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.
பத்திரப்பதிவு துறையின் புதிய விதிகளால் மக்கள் அவதி
உடுமலை, ஜன.2- நிலம் மற்றும் வீட்டுமனைகளின் அசல் பத்திரங்கள் காண வில்லையெனில், அதன் நகல் பத்திரம் பெற அரசின் தற்போ தைய புதிய விதிகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். பத்திரப்பதிவுத்துறையின் புதிய விதிகளின்படி, நகல் பத் திரம் பெற காவல்துறையின் பரித்துறை கடிதம் இருந்தால் மட்டுமே நகல் ஆவணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால், புதிய விதிகளுக்கு முன்னர் ஆவணம் தவறவிட்ட வர்கள் நாளிதழ்களில் காணவில்லை என விளம்பரம் செய்த பின், எவ்வித வில்லங்கமும் இல்லாத நிலையில், பத்திரப் பதிவு துறையால் புதிய நகல் ஆவணம் தரப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய புதிய விதிகளால் ஆவணங்களை தவறவிட்டவர்கள், காவல் துறையில் புகார் தெரிவித்து, பின்னர் அவர்கள் கேட்கும் பல விதமான ஆதாரங்களை சமர் பித்தும், பரித்துரை கடிதம் பெற முடியாத நிலையே உள்ளது. இதனால் ஆவணங்களை தவற விட்டவர்கள் பல விதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், வீண் காலதா மதமும் ஏற்படுவது மட்டுமின்றி, அதிக பண விரையமும் ஏற் படுகிறது. பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் இருக்கும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். தற்போ தைய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உடனடியாக நகல் ஆவணங்களை வழங்க துரித நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என உடுமலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய அளவிலான போட்டியில் சாதித்த அரசுப்பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு
திருப்பூர், ஜன.2- திருப்பூரில் அரசு பள்ளி மாணவி தேசிய அளவில் லக்னோ வில் நடைபெற்ற 80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 2 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு திருப்பூ ரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் சோளிபாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ் - விமலா தம்பதியினரின் மகள் மெகிடா எபி. தேவராஜ் கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மகள் மெகிடா எபி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தடை தாண்டுதல் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த டிசம்பர் மாதம் 16 முதல் 20 ஆம் தேதி வரை தேசிய அளவில் லக்னோ வில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 14 வயது எடை பிரிவில் 800 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் கலந்து கொண்டு 2 ஆவது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்றுள் ளார். கடந்த இரண்டு வருடங்களாக எடுத்துக்கொண்ட கடின முயற்சியால், மாவட்ட அளவில் , தமிழக அளவில் நடை பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வெற்ற இவர், தற்போது தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சாதித்துள்ளார். குறிப்பாக, பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் வெற்றி பெற்ற இந்த மாணவியை சிறப்பு செய்யும் விதமாக அவருக்கு செவ்வாயன்று உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. வெற்றி வெற்றி மாணவிக்கு அனுப்பர்பாளையம் அரசு பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், சார்பில் வேலம்பாளையம் சாலை யிலிருந்து அரசு பள்ளி வரை வாகனம் மூலம் பேரணியாக அழைத்து வந்து ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாலை அணி வித்து பாராட்டு தெரிவித்தனர்.
குளங்களுக்கு தண்ணீர் விடக்கோரி சாலை மறியல்
உடுமலை, ஜன.2- திருமூர்த்தி அணையில் இருந்து குளங் களுக்கு தண்ணீர் விடக்கோரி உடுமலை தாராபுரம் சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன் றிய பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வரும் நிலையில், கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த மழையால் விவசாய பயன்படாட்டிற்கு தண்ணீர் தேவையில்லாத காரணத்தால், பாசனத்திற்கு தேவை போக மீதம் உள்ள தண்ணீரை ஊர் பொது குளங்க ளில் சேகரித்து வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் புதுப்பாளையம் வாய்க்காலில் இருந்து குளங்களுக்கு தண் ணீர் செல்வதை பொதுப்பணித்துறை அதி காரிகள் நிறுத்தியதால் மீண்டும் குளங்க ளுக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பர பரப்பு ஏற்பட்டது.
பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் சேதம்
உடுமலை, ஜன.2- உடுமலை அருகே நூற்பாலையில் ஏற் பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள் ளான நூல்கள் தீயில் எரிந்து நாசமானது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள பூலாங்கிணறு, முக்கோணத் தில் அகிலா டெக்ஸ்டைல் என்ற தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலை யில் 2 ஆம் தேதி செவ்வாயன்று உற்பத்தி செய்யப்பட்ட நூல் பண்டல்கள் இருக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் நூற்பாலையில் கரும்பு புகை பல அடி தூரம் பரவியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பல மணி நேரமாக தீயை கட்டுப் படுத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள உடுமலை காவல்துறையினர் தீ பிடித்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் பல கோடி ரூபாய் மதிப்பி லான நூல்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வயதுடைய 35 தென்னை மரங்களை மாற்று இடத்தில் நட்டு விவசாயி சாதனை
திருப்பூர், ஜன.2- திருப்பூரில் சுமார் 20 ஆண்டுகள் வளர்ந்த தென்னை மரங்களை விவசாயி ஒருவர் மாற்று இடத்தில் நடவு செய்து சாதித்தார். அவர் இதுவரை 35 மரங்களை இடமாற்றம் செய்ததில் 33 மரங்கள் தற்போது காய் காய்ப் பதாகவும் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகசுந்த ரம் (54). இவர் தனக்கு சொந்தமான இடத் தில் புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்க நினைத்தார். அந்த இடத்தில் சுமார் 50 தென்னை மரங்கள் உள்ளன. இவை காய் காய்த்து தற்போது தேங்காய்கள் விற்ப னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் சண்முகசுந்தரம் தனக்கு சொந்த மான மற்றொரு தோட்டத்தில் இடம் உள் ளதை சரியாக பயன் படுத்தி அங்கு இந்த தென்னை மரங்களை மாற்றி நடவு செய்ய முடிவு செய்தார். இங்குள்ள 35 தென்னை மரங்களை கிரேன் உதவியுடன் பொக்லைன் எந்திரத்தின் மூலம் தென்னை மரத்தை வேரோடு பறித்து, லாரி மூலம் கொண்டு சென்று சுமார் ஒரு கி.மீ தூரம் உள்ள மற்றோரு தோட்டத் தில் நடவு செய்தார். இதுதொடர்பாக விவசாயி சண்முகசுந்த ரம் கூறுகையில், தனது தந்தை காலத்தில் வைக்கப்பட்ட இந்த தென்னை மரங்கள் இன்று வரை நல்ல முறையில் காய்கள் காய்த்து வருகிறது. இளநீர், தேங்காய், கொப் பரை தேங்காய், மட்டை மற்றும் ஒலை கீற்று என ஒரு மரம் பல்வேறு வகைகளில் பயன் பட்டு வருகிறது. இதனால் நாங்கள் மிகவும் பயன் அடைந்தோம். இந்த நிலையில் இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்தால் மீண் டும் இந்த மாதிரி மரம் வளர்க்க மீண்டும் 20 வருடம் ஆகும். எனவே என் தந்தை கந்தசாமி நினைவாக இந்த மரங்களை இவ்வாறு இடம் மாற்றி மீண்டும் புத்துயிர் கொடுத்து வளர்த்து வருகிறேன். இந்த 35 மரங்களில் கடந்த மாதம் 25 மரங்கள் கொண்டு வந்து இடம் மாற்றம் செய்தேன். அதில் 23 மரங்கள் தற் போது மீண்டும் காய் காய்க்க ஆரம்பித் துள்ளன. இரண்டு மரங்கள் மட்டும் பட்டுப் போனது. இவை அனைத்தும் நல்ல முறை யில் உள்ளது. குறிப்பாக இடமாற்றம் செய் யப்பட்ட 35 மரங்களில் 33 மரங்கள் நல்ல முறையில் வளர்ந்துள்ளது. காய்கள் காய்க்க தொடங்கியுள்ளது, என்றார்.
நீரில்முழ்கி பலியான சிறுவன்
கோவை, ஜன.2- கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள அணைக்கட்டில், புத் தாண்டை கொண்டாடுவதற்காக குளிக்கச் சென்ற சிறு வன் நீரில் மூழ்கி உயிரிழந்த சமபவம் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்த வர் முருகநாதன். இவரின் மனைவி மகேஸ்வரி. இவர்க ளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் புகழேந்தி வேளாங்கண்ணி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் முருகநா தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என பத்து பேர் புத்தாண்டை கொண்டாட ஈஷா யோகா மையத்துக்கு, டெம் போவில் சென்றனர். அப்பொழுது நரசீபுரம் சாலையில் உள்ள புதுக்காட்டு வாய்க்கால் அணைக்கட்டில் அனைவரும் குளித்துள்ளனர். புகழேந்தி அணைக்கட்டில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, 12 அடி ஆழமுள்ள பகு திக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றும், முடியவில்லை. இதை அடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையி னர், அணைக்கட்டில் மூழ்கிய சிறுவனை சடலமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து, சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு
கோவை, ஜன.2- இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர் கூடி வர வேற்பு கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவர், கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்தியாவில் உள்ள எல்லைப் பகுதிகளில் பணியாற்றி விட்டு 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்று வீடு திரும்பி யுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக, ராணுவ வீரர் குடியிருக்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் கேரள செண்டை மேளம் முழங்க தினேஷ் பாபுவுக்கு உற்சாக வரவேற்பு அளித் தனர். மேலும், ஆராத்தி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
ஈரோடு, ஜன. 2- அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் அனுப்ப மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெரும் பயனா ளிகள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற் குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10ஆம் வகுப்பில் பயிலும் மாணவியர் தேசியம யமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிக ளில் தமது பெயரில் வங்கிகணக்கு தொடங்க வேண்டும். அக்கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இவற்றுடன் வருமானச் சான்று மற்றும் சாதிச்சான்று பெற்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரி யர்களிடம் சமர்பிக்க வேண்டும். அரசுப் பள்ளித் தலைமையா சிரியர்கள் மாணவியர்களது விபரங்களை இணையதளத் தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதிய கட்டடம் 4-ம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான்
நீலகிரி, ஜன.2- பந்தலூர் அருகே போதைக்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண் டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உப்பட்டி நண் பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான் போட்டியை நடத்தினர். பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே துவங்கிய போட்டி, 5 கி.மீ. தூரமுள்ள உப்பட்டி பஜார் வரை சென்றது. இதில் கூடலூர் பகுதியை சேர்ந்த ஜமால் முதல் இடத்தையும், உப்பட்டியை சேர்ந்த முஜ்பூர் ரகுமான் 2 ஆம் இடத் தையும், பந்தலூரை சேர்ந்த சதீஷ் 3 ம் இடத்தையும் பிடித் தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை, பண முடிப்பு, பதக்கம் வழங்கப்பட்டது.
ஈரோடு: ஓட்டுநர் மரணம்
ஈரோடு, ஜன. 2- அந்தியூர் அருகே பார்சல் சர்வீஸ் ஓட்டுநர் மரணம டைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சங்கராம்பாளையத் தைச் சேர்ந்தவர் குருசாமி (52). இவர் மொடக்குறிச்சானூரில் தங்கி நசியனூரில் உள்ள ஏகேஆர் பார்சல் சர்வீஸ்சில் ஓட்டு நராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிறன்று மாலை உடல் நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சென்ற குரு சாமி திடீரென மயக்கமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, குருசாமியை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறி யுள்ளனர். குருசாமியின் இறப்பு குறித்து அவரது மனைவி ஆனந்தி அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
கோவையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
கோவை, ஜன.2- கோவை புறநகரில் செயல்பட்டு வரும் ரியல் வேல்யூ ப்ரொமோட்டர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற் கொண்டனர். கோவை உட்பட தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் கட்டுமான நிறுவனங் களைக் குறிவைத்து இந்தச் சோதனை நடந்து வருகிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிதாக பேசப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தி லேயே தமிழகத்தில் பல இடங்களில், செவ்வாயன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத் தினர். சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், விருதுந கர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண் டனர். கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் உள்ளிட்ட 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். பட்ட ணம் பகுதியில் ரியல் வேல்யு ப்ரமோட் டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறு வனத்தை ராமநாதன் என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அலுவ லகத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந் திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர். அதேபோல ரியல் வேல்யு ப்ரமோட் டர்ஸ் உரிமையாளர் ராமநாதன் மகன் சொர்ண கார்த்திக் இல்லம் மற்றும் ரியல் வேல்யூ ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
முட்டை விலை உயர்வு
நாமக்கல், ஜன.2- என்இசிசி கூட்டத்தில் முட்டை விலையை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாட்டிற்கும், வெளி மாநிலங்க ளுக்கும் ஏற்றுமதி செய்ப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் தினசரி கோழி முட்டைகளை அனுப்பி வைக்கப்படுகின்றன. முட்டையின் விலையை நாமக்கல் என்இசிசி கூட்டத்தில் நிர்ணயிக்கப்படுகிற நிலையில், செவ்வாயன்று ஒரு முட்டை யின் பண்ணைக் கொள்முதல் விலை ரூபாய். 5.65 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
சிறுத்தையிடமிருந்து தப்பிய பெண்
நீலகிரி, ஜன.2- நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சாலையில் நடந்த சென்ற பெண்ணை சிறுத்தை துரத்திய சம்பவம் அப்பகுதி யில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில், கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, சமீபத்தில் மூன்று பெண்களை தாக்கியதில் சரிதா என்ற பழங்குடியின பெண் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் 4 இடங்க ளில் கூண்டுகள் வைத்தும், 20 இடங்களில் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தியும், 70 வனப்பனியாளர்கள் இணைந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனி னும் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இந்நிலை யில், செவ்வாயன்று பந்தலூர் அருகே பாதிரிமூலா பகுதி யைச் சேர்ந்த மோகிலா என்பவரை சிறுத்தை துரத்தி உள்ளது. சிறுத்தையிடமிருந்து உயிர்தப்பிக்க ஓடியதில், தவறி விழுந்து உடலில் லேசான காயங்கள் ஏற்பட்டது. இவரின் கூச்சலை கேட்டு அங்கு வந்த சிலர், சத்தம் எழுப்பி சிறுத்தையை விரட்டினர்.இதனால் சிறுத்தையிடம் இருந்து மோகிலா உயர்த்தப்பினார். தொடர்ந்து வனக்குழுவினர் அப்பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிராம மக்கள் மாலை மற்றும் காலை நேரங்களில் பாதுகாப்புடன் வெளியே நடக்கவும் அறிவு றுத்தி உள்ளனர்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்
நாமக்கல், ஜன.2- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் ஆய்வா ளர் தவமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, குமாரபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வட்டிக்கு பணம் வாங்கிய பொதுமக்களை நிதி நிறுவன ஊழியர் துன்புறுத்தி வருகின்றனர். எனவே, பொது மக்கள் யாராவது, வட்டிக்கு பணம் பெற்றும், வட்டி செலுத்த முடியாமல் துன்பப்படுவதாக இருந்தாலும் அல்லது வேறு வகையில் அதிக வட்டிக்கு பணம் பெற்று துன்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் மற்றும் எவ்வித பிரச்சனையாக இருந்தாலும், உடனே குமாரபாளையம் காவல் ஆய்வா ளரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
திருப்பூர், ஜன. 2- திருப்பூர் அருகே புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை வன்பு ணர்வு செய்த இரண்டு பேர் கைது செய்யப் பட்டனர். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரை விட்டு வெளியேறி தனி யாக திருப்பூர் ரயில் நிலையம் வந்து ஆதர வற்று நின்றுள்ளார். அப்போது பீகார் மாநி லத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (23), ரூபேஷ்கு மார் (21) என்ற இருவருடன் பழக்கம் ஏற்பட் டது. எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வந்த சிறுமியை இரண்டு பேரும் பணியில் சேர்த்து விடுவதாக கூறி திருப்பூர் மாவட் டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை அருகே மருதுரையான் வலசு பகுதியில் வாட கைக்கு வீடு எடுத்து தனியே தங்க வைத்துள்ள னர். மேலும் வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் புத்தாண்டு அன்று இரவு கொண்டாட்டத்தின் போது நிதிஷ்குமார், ரூபேஷ் குமார் இருவரும் சிறு மியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு புத்தாண்டை கேக் வெட்டி கொண்டா டியுள்ளனர். பின்னர் இருவரும் மது அருந்தி உள்ளனர். சிறுமியை மது அருந்த வற்புறுத் திய போது அவர் மறுத்துள்ளார். இதனை அடுத்து இரண்டு பேரும் சேர்ந்து குளிர்பா னத்தில் மயக்க மருந்தை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். இதனை குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். அவரை இரண்டு பேரும் வன்புணர்வு செய் துள்ளனர். காலை மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி தனது நிலை அறிந்து அலற துவங்கி னார். இதனை அடுத்து வீட்டின் உரிமை யாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த பொழுது சிறுமியின் நிலை குறித்து தெரிய வந்தது. இதனை அடுத்து காங்கே யம் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிதீஷ் குமார், ரூபேஷ் குமார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள னர்.
சிறுமியின் காலில் சூடு வைத்து சித்தரவதையா?
நாமக்கல், ஜன.2- ஏழு வயது சிறுமியின் காலில் சூடு வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் பள்ளிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேறக்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஏழு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அச்சிறுமியின் குதிகால் இரண்டிலும் காயங்கள் உள்ளதை அருகில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து விசாரித்தபோது, தனது தாயார் சூடு வைத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அங்குள்ளவர்கள் பள்ளிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், பெண் குழந்தை கள் பாதுகாப்பு அவசர எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பள்ளி பாளையம் காவல் துறையினர் பெண் குழந் தையும், தாயையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட னர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகை யில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் களிடம் புகார் சென்றுள்ளதால் மேல் விசார ணையை அவர்கள் செய்யவார்கள். பெண் குழந்தையை ஒப்படைக்க உள்ளதாக தெரி வித்தனர். இதனையடுத்து மாவட்ட குழந்தை கள் நல அலுவலர்கள் காவல் நிலையத்திற்கு வந்து, சிறுமியை மீட்டு சென்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், முதல் கட்ட மாக சிறுமிக்கு காயங்கள் ஆறும் வகை யில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை யில் தொடர் சிகிச்சைகள் வழங்கப்படும் அதன் பிறகு விசாரணை மேற்கொள்ளப் படும், என்றனர்.