நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுவதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட சோதனை சாவடிகளில் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியினை தீவிரப்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்பாணிப்பாளர்கள், மாவட்ட வன அலுவலர்கள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஆட்சியர்கள், கோவை கிராந்தி குமார் பாடி, பாலக்காடு சித்ரா, திருச்சூர் கிருஷ்ணன் தேஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.