திருப்பூர், மே 30 - திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்க செய லாளருமான மறைந்த தலைவர் என். ஆறுமுகத்தின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அரிசிக்கடை வீதி தோழர் என்.ஆறுமுகத்தின் 11 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், கே.உண்ணிகிருஷ்ணன், தெற்கு மாந கரச் செயலாளர் த.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், சாலை யோர வியாபாரிகள் சங்கச் செயலா ளர் பி.பாலன், சிஐடியு ஆட்டோ சங்கத் தலைவர் சுகுமார் உள்ளிட்ட கட்சி நகரக் குழு உறுப்பினர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற்றனர். அத்து டன் சிக்கண்ண செட்டியார் வீதி முன்பாக சுமைப்பணித் தொழிலாளர்கள் தோழர் என்.ஆறுமுகம் உருவப்படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தினர். ரயில்வே கூட்செட் திருப்பூர் ரயில்வே கூட்செட் முன் பாக திருப்பூர் ரயில்வே சிஐடியு கூட்செட் சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் சார் பில் என்.ஆறுமுகம் நினைவு தினம் வியாழனன்று காலை கடைப்பிடிக்கப் பட்டது. இதில் திருப்பூர் மாவட்ட சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.ராஜகோபால், ரயில்வே கூட்செட் சங்கத் தலைவர் எஸ். எம்.பழனிச்சாமி, சங்கப் பொருளாளர் ஏ.சுப்பிரமணி, துணைத் தலைவர் எம். சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இதில், பெண் தொழிலா ளர்கள் 30 பேர் உள்பட கூட்செட் சுமைப் பணித் தொழிலாளர்கள் 150 பேர் பங் கேற்று தோழர் என்.ஆறுமுகத்துக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.