திருப்பூர், பிப்.13- தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தேங்காய் எண் ணெய் உட்பட்ட உள்நாட்டு எண்ணெய் வகை களை நியாயவிலைக்கடைகளில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டுள் ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியி ருப்பதாவது, கோவை, திருப்பூர் மாவட்டங்க ளில் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் தென்னை பயி ரிடப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து தேங்காய் எண்ணெய் முதல் சிரட்டை உரிமட் டையிலிருந்து நார்கழிவு இயற்கை உரமாக பயன்படுத்தப்படுவது வரை 400க்கும் மேற் பட்ட உபபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. இந்த இரண்டு ஆண்டு காலமாக தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, நாரும் நார்தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தாராளமாக எண்ணெய்யை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதும், இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளதும் தேங்காய் விலை வீழ்ச்சிக்கு பிரதான காரண மாக உள்ளது. தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு தேங்காய் எண் ணெய் உட்பட்ட உள்நாட்டு எண்ணெய் வகை களை நியாயவிலைக்கடைகளில் வழங்க வேண்டும். தேங்காய் பவுடர், தேங்காய் துரு வல், வினிகர், இளநீரைப் பதப்படுத்தி விற் பனை செய்தல் ஆகிய தொழில்களை ஊக்கு விக்க வேண்டும். தென்னை உரிமட்டையிலி ருந்து நார் தயாரித்தல், நார் கழிவிலிருந்து இயற்கை உரம் தயாரித்தல் - ஏற்றுமதி வாய்ப் புகளை ஏற்படுத்தித் தருதல். தென்னை கைமட்டைகளை எரித்து மின்சாரம் தயாரித் தல், தேங்காய் தொட்டிகளை (சிரட்டை - ஓடு) எரித்து கார்பன் தயாரிப்பதற்கு உதவ வேண் டும். தென்னை மரங்களுக்கு ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பயிர் காப்பீடு திட்டம் இருக்கிறது, அதில் பதிவு செய்ய வும் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும், தமிழ் நாடு அரசு தென்னைக்கு பயிர்க்காப்பீடு திட் டம் துவங்கவேண்டும். ஒன்றிய அரசின் காயர் போர்டு மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயன்களை பெற்றிட உதவ வேண்டும். கேரளாவை போல் தமிழ் நாட்டிலும் காயர் வாரியம் துவங்கவேண் டும். தென்னை விவசாயிகளின் கை மட்டை கள், உரி மட்டைகள், நார், நார் கழிவு ஆகி யவை உரிய விலையின்றி இருக்கிறது, இவற்றை இயற்கை உரமாக மாற்றுவதற்கு எளிய முறைகளை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கவும், பயிற்றுவிக்கவும் வேண்டும். தென்னையிலிருந்து கருப்பட்டி, பதனீர் தயா ரித்தலுக்கு மானிய உதவிகளை செய்திட வேண்டும். திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் உள்ள ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய நிறுவனத்தை இப் பகுதி தென்னை விவசாயிகள் பயன்படுத் தும் வகையில் உதவ வேண்டும். தரமான இயற்கை நுண்ணுயிர்கள் மற்றும் நுண் ஊட் டச்சத்துக்கள் சிறு குறு விவசாயிகளுக்கு முழு மானிய விலையில் வழங்கிட வேண்டும். வெள்ளை ஈ, ரோபைடு, வாடல் நோய்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நோய்க்கட்டுப் பாடுகள் ஏற்படுத்த வேண்டும்.
காய்கறிகள்:
திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக விவசா யிகள் காய்கறிகளை பயிர் செய்து வருகின் றனர். மழைச்சேதம், நோய்தாக்குதல், கடும் வறட்சி காலங்களில் மட்டும் தான் விலை கிடைக்கிறது. சில நேரங்களில் வெளி மாநி லக் காய்கறிகள் வரத்தின் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. எனவே புள்ளி விவர தரவு களின் அடிப்படையில் உரிய காய்கறிகள் பயிர் செய்ய வேளாண்மை பல்கலைக்கழ கம் ஆலோசனைகளை விவசாயிகளுக்கு சென்றடையும் அடிப்படையில் செய்ய வேண் டும். காய்கறிகளை விவசாயிகள் விற்கும் கமி ஷன் மண்டிகளில் 10% கமிஷன் என்பதை கட் டுப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மை: இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், புதிய புதிய பெயர்களில் விளம்ப ரத்துடன் தனியார் பெரும் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இம்மருந்துகளைப் பயன் படுத்தாமல் உரிய விளைச்சல் கிடைக்காத நிலையே உள்ளது. இயற்கை விவசாய முறை களை ஒரு சில விவசாயிகள் மட்டும் செய்வது பயனற்றதாக்கி விடுகிறது, ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் செய்யவும் உயர் விளைச்சலை பெறவும் இயற்கையை பாது காக்கவும் உதவிட வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறப்பட்டிருக்கி றது.