திருப்பூர், மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட் டம் உடுமலையில் வியாழனன்று நடைபெற்றது. இதில் சிஐடியு தையல் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, துணைத் தலைவர் பி. ரத்தினசாமி, துணை செயலாளர் எஸ்.ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.