தோழர் விபிஎஸ் என்றால் வேலம்பாளையம் பகுதியில் தெரியாதவர்கள் மிக குறைவு. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக திகழ்ந்தார். சிறு வயதில் தந்தையின் பாத்திரப் பட்டறையில் வேலை செய்தார். பின்னர், காந்திநகர் சர்வோதயா சங்கத்தில் தொழிலாளியாக சிறிது காலம் பணியாற் றினார். டிடிபி மில்லில் பஞ்சாலைத் தொழிலாளியாக இளமையில் தொடங்கிய வாழ்க்கை, முதுமை வரை தொடர்ந்தது. சிஐடியு பஞ்சாலைத் தொழிற்சங்கத்தில் ஆலைக் கிளையிலும், மாவட்ட நிர்வாகியாகவும் செயல்பட்டவர். வேலம்பாளையம் கட்சிக் கிளைச் செயலாளராகவும், நகரக் குழு உறுப்பினராகவும், இடைக்குழு செயலாளராக வும் செயல்பட்டார். கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் தோழர்கள் எம்.நஞ் சப்பன், கே.எஸ்.கே. ஆகியோரின் தலைமறைவு செயல்பாட்டுக்கு உதவியாக இருந்தார். நாடக நடிகராக, சிலம்பாட்டக் கலைஞராக, பாடகராக, பேச்சாள ராக என பன்முக ஆற்றல் கொண்டவராகவும் திகழ்ந்தார். கிளைத் தோழர்களின் குடும்பத்தில் ஒருவராக, பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் மூத்தவராக அவரைப் பார்த்தனர். தனது வாழ்வில் எளிமையைக் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். கடந்த டிச.10 ஆம் தேதி நடைபெற்ற செந்தொண்டர் பேரணியிலும் கலந்து கொண்டார். 15.12.2023 சோளிபாளையம் சாலைக்கான மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார். 25 வயது இளைஞரைப் போல் மிகுந்த சுறுசுறுப்போடு செயல்பட்ட அவரது திடீர் மறைவு கட்சிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.
ச.நந்தகோபால்
வேலம்பாளையம் நகரச் செயலாளர்