உதகை, ஜன.24- தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவை யிலுள்ள ஊதியத்தை வழங்க மறுக்கும் தனி யார் எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்தும், இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியு றுத்தி சிஐடியு தலைமையில் தோட்டத் தொழி லாளர்கள் உதகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தேவர்சோலை, தாய்சோலை மற்றும் நாடு காணி ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான தனியார் தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதி யம் வழங்கப்படாமல், அதன் உரிமையாளர் கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி தேயிலை தோட்டத்தொழிலா ளர்கள் புதனன்று உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், தேவர்சோலை, தாய்சோலை, நாடுகாணி ஆகிய எஸ்டேடுகளில் பணி புாியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்ப ளம், போனஸ், விடுப்பு ஊதியம் உள்ளிட்ட வற்றை எஸ்டேட் நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ளது. மேலும் பணிக்கொடை, ஓய் வூதியம், வருங்கால வைப்பு நிதி ஆகிய வற்றையும் நிலுவையில் வைத்துள்ளது. இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் போன்ற வைகள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தொழிலாளர் துறை சார் பில் பேச்சுவார்த்தை நடத்தி, வழங்குவதாக ஒப்பு கொண்டும் நிலுவையில் உள்ள கோரிக் கைகளை எஸ்டேட் நிர்வாகங்கள் நிறைவேற் றாமல் காலம் தாழ்த்தி வருகின்றன.
இதுத விர தேயிலை எஸ்டேட்கள் பராமரிப்பின்றி முட்புதர்கள் வளர்ந்து காட்சியளிக்கின்றன. இதனால் வனவிலங்குகளால் தொழிலாளர் கள் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய நிலை அபாயம் உள்ளது. மேலும் எஸ்டேட்டில் வசிக் கக்கூடிய தொழிலாளர்களுக்கு தண்ணீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என்றனர். மேலும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்காமல் திரும்ப செல்ல மாட்டோம் என்று போராட்டக் காரர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் கவுசிக், உதகை வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், வட்டாட்சியர் சரவ ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு சிஐ டியு மாவட்டத் தலைவர் வினோத் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலா ளர் சங்கரலிங்கம், பொருளாளர் நவீன் சந்தி ரன், தோட்டத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆஸரா, போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கணேஷ், தோட்ட தொழிலாளர் சங்க நிர்வாகி சுந்தரம், மாவட் டக்குழு உறுப்பினர் இளங்கோ, போராட்டக் குழு நிர்வாகிகள் ரத்தினி, ஜெயந்தி, விஜயன், பிஜூ உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.