ஈரோடு, அக். 14- ஊராட்சிகோட்டை மலையடிவாரத் தில் வசிக்கும் 30 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி தாலுகா மாநாடு அண்மையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திங்களன்று வட்டாட்சி யரிடம் அளித்தனர். இதில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பவானி சுற்றுச்சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி கோட்டை மலை அடிவாரத்தில் குடியிருக்கும் 30 குடும் பத்தினருக்கு பட்டா வழங்க வேண்டும். வாய்க்கால் பாளையம் மக்களுக்கு சுகா தாரம், ரேஷன்கடை, பேருந்து நிறுத்தம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். ஆப்பக்கூடல் நால்ரோட் டில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட் டவை வலியுறுத்தப்பட்டன. இந்த மனு அளிக்கும் இயக்கத்தில் தாலுகா செயலாளர் ஆர்.பிரகாஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பிபி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஏ.ஜெகநாதன், எஸ்.மாணிக்கம், தாலுகா கமிட்டி உறுப்பினர் கண்ணன் மற்றும் எம்.தங்கராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மனுவை பெற் றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.