தருமபுரி, அக்.14- வனசிறுமகசூலை எடுக்க அனுமதி கேட்டு பழங்குடி யின மக்கள் தருமபுரி ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்த னர். இதுதொடர்பாக அம்மனுவில் கூறியிருப்பதாவது, தரும புரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பண்ணப் பட்டி கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். எங்களுக்கு வனத்தைவிட்டால் வேறு எந்த சொத்தும் இல்லை. காட்டில் கிடைக்கும் காய், கனி, கிழங்கு, கீரை வகைகள், தேன் உள்ளிட்ட பொருட்களை உணவாக கொண்டு வாழ்ந்து வருகிறோம். வன விளைப் பொருட் களை (வனசிறுமகசூலை) தொடர்ந்து அனுபவித்துக் கொள்ள 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஆணை பிறப்பித் தது. அரசு மூலம் வனக்குழுவை அமைத்து பதிவு செய்து, அதன் மூலம் வனவிளைப் பொருட்களை அனுபவத்து வருகி றோம். வனநில உரிமை சட்டம் – 2006, வனத்தில் வாழும் பழங் குடிகளை பாதுகாத்து வருகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய தாக வந்த ரேஞ்சர் பல்வேறு இடையூறுகளை கொடுத்து வரு கிறார். நாங்கள் வாழும் வனத்தைவிட்டு வெளியேற வேண் டும் என மிரட்டுகிறார். பென்னாகரத்திலிருந்து ஒகேனக் கல் செல்லும் சாலை சந்திப்பில் வனத்திற்கு பாரம்பரிய மாக செல்லும் வழியை ரேஞ்சர் அடைத்துவிட்டார். வனசிறு மகசூலை அனுபவித்துக் கொள்ளலாம் என மாவட்ட வன அலுவலர் கடந்த ஜூலை 31 ஆம் தேதியன்று உத்தர விட்டுள்ளார். ஆனால், வனத்திற்கு காலையில் சென்று மாலையில் திரும்பிட வேண்டுமென கூறுகிறார்கள். பழங்குடி யினர் செல்லும் பாதையை அடைக்கக்கூடாது எனவும், பழங் குடி மக்கள் வனத்தைவிட்டு வெளியேற்றக்கூடாது எனவும், ஊராட்சி மன்ற கிராம சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக காட்டில் சிறுமகசூல் எடுக்க விடாமல் தடைசெய்து விட்டனர். சிறு மகசூலைத்தவிர வேறு வருவாய் எதுவும் எங்களுக்கு இல்லை. புளியமர மகசூலும் இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுவிட்டது. புளியம்பழம் வரும் காலத்தில் காவலுக்கு வனத் தல் தங்கிதான் பாதுகாப்போம். புளிமகசூலை சேகரிக்க காட்டில் தங்கிதான் சேகரம் செய்வோம். இரண்டாண்டு கால மாக காட்டிற்கு செல்லக்கூடாது என ரேஞ்சர் தொந்தரவு செய் கிறார். மாவட்ட வன அலுவலர்கள் சிறு மகசூலை அனு பவிக்க உத்தரவு பிறப்பித்த பிறகும், ரேஞ்சர் வனத்திற்கு செல்லவிடாமல் தொந்தரவு செய்கிறார். எங்களுக்கு வீடு கட்டி கொடுத்த இடத்திலிருந்து காட்டிற்கு சென்று சிறு மக சூலை எடுக்க 25, 30 கி.மீ செல்ல வேண்டும். போக வர 50, 60, கி.மீ நடக்க வேண்டும். எனவே, வனத்தில் தங்கி சிறு மகசூலை எடுத்துவர அனுமதி வழங்கி, எங்களின் வாழ் வாதாரத்தை உறுதிபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.