districts

பேரூராட்சி அதிகாரியை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

ஈரோடு, ஜூலை 13- சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகு தியில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகிக் கப்படாததை கண்டித்து, பேரூராட்சி செயல் அதிகாரியை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூ ராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் காவிரி ஆற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சென் னிமலையை அடுத்த ஈங்கூர் ரயில்வே பாலம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பிரதான காவிரி ஆற்று குடிநீர் குழாய் உடைந்து விட்டது.  இதை சரி செய்யும் பணி நடைபெற்று வரு கிறது. 2 வாரமாகியும் உடைந்த குழாய் சரி  செய்யப்படாததால், சென்னிமலை பேரூ ராட்சி பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப் பட்டு வருகின்றனர். இதுகுறித்து சென்னி மலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெய ராமனிடம் வார்டு கவுன்சிலர்கள் முறையிட் டுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னிமலை பேரூராட்சி  வார்டுகளைச் சேர்ந்த 9 கவுன்சிலர்கள் புத னன்று இரவு பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் கவுன்சிலர்கள் அனை வரும், கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோ கம் செய்யாததை கண்டித்து பேரூராட்சி செயல் அதிகாரியை முற்றுகையிட்டனர். மேலும் அவரிடம், “ஏன் இன்னும் உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் விநியோகம் செய்யாமல் இருக்கிறீர்கள்” என கவுன்சிலர் கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு, விரைவில் உடைந்த குழாய் சரி செய்யப் படும் என்றும், அதற்கு முன்பாக லாரிகள் மூலம் வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படும் என செயல் அதிகாரி ஜெயராமன் கூறுகையில் உறுதியளித்தார். அதன்பேரில் கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

;