districts

img

அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், செப்.10- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் கட்டிடங்களின் தரம் மற்றும் அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட நிர் வாகம் ஆய்வு செய்திடுமாறு இந்திய  மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட் டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக இந்திய மாண வர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சா.பிரவீன் குமார், மாவட்ட செயலாளர் தௌ.சம்சீர் அகமது  ஆகியோர் சனிக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:  பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட சாமிகவுண்டம்பாளையம் அரசு தொடக்க பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அந்த நேரத் தில் அந்த இடத்தில் மாணவர்கள் மற் றும் ஆசிரியர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து வட் டார வளர்ச்சி அலுவலரும், முதன்மை கல்வி அலுவலரும் தற் போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது

அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் மற் றும் மாணவர்கள் படிக்கும் பள்ளி யில் இப்படியான சம்பவங்கள் நிக ழாமல் இருக்கும் வண்ணம் மாவட்ட  நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதேபோல் ஊத்துக்குளி ஒன்றி யம், சரவணபுரம் அரசு மேல்நிலை பள் ளியிலும் சுற்றுச்சுவர் இல்லை. மழை  காலங்களில் பள்ளி வளாகத்தில் தண் ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள் ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரக் கேட்டு மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அப்போதைக்கு மண் கொட்டி அங்கு சரி செய்யபட்டது. தற்போது மழைக்காலம் துவங்கி யுள்ள நிலையில் தற்போது வரை சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. இதே போல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அங்கு படிக்கக் கூடிய மாணவ, மாணவிகள் எண் ணிக்கைக்கு ஏற்ப ஏராளமான பள்ளி களில் அடிப்படை வசதிகள் இல்லா மலும், கட்டிடங்கள் இடிந்து விழும்  நிலையிலும் இருக்கின்றன. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடன டியாக மாவட்டம் முழுவதும் உள்ள  அரசு பள்ளிகளின் நிலை குறித்து அறிக்கை தயார் செய்து அதன் மீதான நடவடிக்கைகளை துரிதப் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;